தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?

214 0

மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மயோனிசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த தடை ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை முட்டையில் இருக்கும் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலாப் பொருட்களை கொண்டு மயோனிஸ் தயாரிக்கப்படுகிறது. பச்சை முட்டை பயன்படுத்துவதால் கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சென்னையில் மயோனிஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Salmonella typhimurium, Salmonella enteritidis, Escherichia coli, மற்றும் Listeria monocytogenes போன்ற கிருமிகளால் உடல்நலத்திற்கு பல்வேறு வகைகளில் தீங்கு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது. இதனால் குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை போன்றே மயோனிசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயோனிஸ் அதிகமாக கிரில் சிக்கன் போன்ற உணவுப்பொருட்கள் தொட்டு சாப்பிடவே கொடுக்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் இந்த மயோனிஸ் பொருளை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் தொற்று நோய் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எளிதில் தொற்றி விட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவே சுகாதாரத்துறை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் பல உணவு வணிக நிறுவனங்கள் மயோனிஸ் தயாரிக்க பச்சை முட்டையை பயன்படுத்துவதாகவும் முறையற்ற தயாரிப்பு, முறையற்ற சேமிப்பு வசதிகள், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபாடு ஆகியவை அபாயத்தை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயோனிஸ் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தரமான உணவை உணவகங்களில் வழங்க வேண்டும். இதுதான் அரசின் நோக்கம். பாதுகாப்பான உணவு சூழலை உருவாக்க அரசு முயற்சி செய்து வருகிறது. பாதுகாப்பான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியம். உடலந்லத்தை பாதுகாக்க தரமான உணவை உண்பது முக்கியம். மயோனிசுக்கு தடை விதித்துள்ளதால் சில காலங்களுக்கு இதன் பயன்பாடு குறையும். முறையான பாதுகாப்பு குறித்து தகவல் வரும்வரை இந்த தடை தொடரும்.” எனத் தெரிவித்தனர்.

 

Related Post

விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

Posted by - July 6, 2023 0
மொடக்குறிச்சி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேருடன் மிதந்த மதுரை…!

Posted by - May 3, 2023 0
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு…

கமலின் இழிவான அரசியல், விஜய் ஒரு பொடிசு.. கடுமையாக சாடிய இயக்குனர்

Posted by - August 29, 2024 0
அரசியல் ஆசை பலருக்கு இருந்தாலும் பெரும்பாலும் நடிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், சீமான் தற்போது விஜய் என சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் களம் காண்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்கள் மார்க்கெட்…

இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

Posted by - April 26, 2025 0
இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *