புதுவித இணையதள மோசடி: ஏமாறும் சிறுநீரக கொடையாளர்கள்

356 0

ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை அடைகிறார்கள்.

சிலருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினால் பயன் கிடைப்பதால் சிறுநீரக தானம் அளிக்க முன்வருவோருக்கு அதிக தேவை உருவாகியிருக்கிறது. இதனால் தானம் அளிக்க முன்வருவோரையும், குடும்ப கஷ்டத்திற்காக சிறுநீரகத்தை விற்க விரும்புவோரையும் குறி வைத்து பல மோசடி வேலைகள் நடக்கின்றன. வறுமையில் வாடும் ஒரு பெண், தனது சிறுநீரகத்தை விற்க முன் வந்திருக்கிறார்.தனியார் வைத்தியசாலை சிறுநீரக மோசடி- சம்மந்தப்பட்டவர்களுக்கு பயண தடை

அவரின் இணையவழி தேடலில் ஒரு முகநூல் பக்கம் அவருக்கு பதிலளித்து, ரூ.10 லட்சத்திற்கு அதனை வாங்க விரும்புவதாகவும், ஆனால் முன்பணமாக ரூ.8 ஆயிரம் அவர் செலுத்த வேண்டும் என பதிலளித்திருக்கிறது. ஒரு மருத்துவமனையின் பெயரையும் கொடுத்து, பணத்தை இணையவழியில் செலுத்தி விட சொல்லி அவசரப்படுத்தியிருக்கிறது.

பணம் செலுத்தும் முன், கொடுக்கப்பட்ட எண்ணை அவர் தொடர்பு கொண்டார். மோகன் அறக்கட்டளை எனும் லாபநோக்கமற்ற அந்த அமைப்பின் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர்கள் பணம் எதுவும் வழங்குவதில்லை என தெரிவித்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அப்பெண்மணி தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தப்பித்தார்.

ஆனால், அவரை போன்ற ஆயிரக்கணக்கானோர் இவற்றை நம்பி பணத்தை இழந்திருக்கின்றனர். இத்தகைய மோசடிகள் பரவி வருகிறது என மோகன் அறக்கட்டளை தெரிவிக்கிறது. பிரபலமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பெயர்களை போலி இடைத்தரகர்கள் பயன்படுத்தி பல அப்பாவிகளை தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

நலிவடைந்து வரும் பொருளாதார சூழ்நிலையில், மக்களில் பெரும்பானோர் தங்கள் வேலைகளை இழந்து, வருமானம் குறைந்ததால், பலர் தங்கள் உறுப்புகளை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. சிறுநீரக பரிமாற்றம் உண்மையில் நடைபெறுகிறதா, இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், அவர்களின் இணையவழி மற்றும் முகநூல் தேடலின் தகவல் பரிமாற்றத்தில் முதலில் கட்ட வேண்டிய தொகை என கேட்பதை பலர் மிகவும் சிரமப்பட்டு கட்டி விடுகின்றனர். ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் உள்ள அவர்கள், பணத்தை இழந்து, மேலும் கடனில் விழுகின்றனர்.

இது குறித்து முகநூல் தளம் நடத்தும் மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “உறுப்பு கடத்தல் மற்றும் மோசடிகள் உள்ளிட்ட மனித சுரண்டலுக்கு தாங்கள் எதிரானவர்கள். இதற்காக தெளிவான விதிகளை வகுத்திருக்கிறோம். மோசடி செய்பவர்கள் மிகவும் அதிநவீனமாக வளர்வதால், முதலீடுகளினாலோ, தொழில்நுட்பங்களினாலோ மட்டும் முகநூல் போன்ற பெரும் தளங்களில் நடைபெறும் மோசடியை 100% தடுக்க முடியாது,” என்று தெரிவித்திருக்கிறார். பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகாரளிக்க முன்வராததால் காவல்துறையால் இதில் எதுவும் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Post

கூகுள் தேடல் 2024:இதையெல்லாமா கூகுளில் தேடுவீங்க…

Posted by - December 11, 2024 0
இந்தியர்கள் மொத்தமாக கூகுளில் அதிகம் தேடியது என்ன? இந்தியன் பிரீமியர் லீக் T20 உலகக் கோப்பை பாரதிய ஜனதா கட்சி தேர்தல் முடிவுகள் 2024 ஒலிம்பிக்ஸ் 2024…

ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம்

Posted by - May 9, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார்…

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர்

Posted by - December 13, 2023 0
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்…

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்

Posted by - May 12, 2025 0
ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல்முறை அல்ல. வாஜ்பாய் காலத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே கார்கில் போரை தன்னிச்சையாக…

இன்று வெளியாகும் ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ.. விலை, கிரே மார்க்கெட் விலை இதுதான்..

Posted by - August 2, 2024 0
இன்று Ola Electric Mobility Limited இன் பங்குகள் கிரே மார்க்கெட் ரூ.17 பிரீமியத்தில் கிடைக்கின்றன என்று சந்தை பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதன் ஐபிஓ விலை, மார்க்கெட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *