Generated Image January 05 2026 11 52AM

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி

101 0

பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ), கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 11-வது நாளாக ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகளும் திறக்கப்பட்டன. எனினும், ஆசிரியர்கள் பலர் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் மாற்று ஏற்பாடுகளை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களும் ஏற்பாடு செய்திருந்தன. எனினும், சில பகுதிகளில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் நேற்று டிபிஐ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, எஸ்எஸ்டிஏ பொதுச்செயலர் ஜே.ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எங்கள் கோரிக்கையை உரிய ஆதாரங்களுடன் எடுத்து முன்வைத்தோம். அதற்கு டெல்லி சென்றுள்ள துறையின் செயலர் சந்திரமோகன் சென்னை திரும்பியதும் அவருடன் கலந்து பேசி பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதுவரை அமைதியான முறையில் எங்களின் போராட்டம் தொடரும். காவல் துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அதேநேரம், கோரிக்கை நிறைவேறும் வரை களத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை. எங்கள் ஊதிய முரண்பாடு பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு எட்டப்படும் என உறுதியாக நம்புகிறோம். நாங்கள் விடுமுறையில் மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், இந்த முறை பள்ளிகள் திறக்கப்பட்டும் வகுப்பறைக்குச் செல்ல முடியாத நிலைக்காக மாணவர்கள், பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் மீண்டும் பள்ளிக்குத் திரும்பி முழு வீச்சில் கற்றல், கற்பித்தலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

விஜய் எம்ஜிஆர் மாதிரி உதவி செய்யனும்… ரஜினியும் உதவவேண்டும் – செல்லூர் ராஜு விருப்பம்

Posted by - June 12, 2023 0
நடிகர் ரஜினிகாந்த் கோடிக்கணக்கான பணம் வைத்துள்ளதாகவும், அவர் மக்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முன் வர வேண்டும் எனவும் செல்லூர் ராஜு கேட்டுக்கொண்டார். ஆர்ஜே.தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மதுரை அருகே…

முருங்கையிலை மாதிரி.. செம்பருத்தி இலை.. இயற்கையின் தங்கபஸ்பம்..வெயிட்லாஸ் முதல் தலைமுடி வளர்ச்சி வரை

Posted by - November 23, 2023 0
சென்னை: முருங்கையிலை போலவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள இலைகளில் மிக முக்கியமானது செம்பருத்தி இலைகள்.. செம்பரத்தை இலைகள் என்றும் சொல்வார்கள். செம்பருத்தி செடியை பொறுத்தவரை, இதன்…

அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Posted by - June 14, 2024 0
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை நடைமுறையில் உள்ள,  பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும்…

இன்ஸ்டாகிராம் காதல் !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்….

Posted by - March 18, 2026 0
சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது. இன்ஸ்டாகிராம் சிறுமியுடன் பழக்கம்  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அருண்…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *