முருங்கையிலை மாதிரி.. செம்பருத்தி இலை.. இயற்கையின் தங்கபஸ்பம்..வெயிட்லாஸ் முதல் தலைமுடி வளர்ச்சி வரை

314 0

சென்னை:

முருங்கையிலை போலவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள இலைகளில் மிக முக்கியமானது செம்பருத்தி இலைகள்.. செம்பரத்தை இலைகள் என்றும் சொல்வார்கள்.

செம்பருத்தி செடியை பொறுத்தவரை, இதன் பூக்கள், விழுதுகள், இலைகள் என அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. வழுவழுப்பு தன்மை உடைய இந்த இலைகள் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தவை. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெறும் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடித்தாலே போதும்… உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய கோளாறுகள் நீங்கும்.

கண் எரிச்சல், கண் நோய்கள், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல், கண்களில் கட்டி போன்ற சூட்டை கிளப்பக்கூடிய பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாகும்.. அதேபோல, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனை இருந்தாலும், இந்த தண்ணீரே அருமருந்தாகிறது.முருங்கையிலை மாதிரி.. செம்பருத்தி இலை.. இயற்கையின் தங்கபஸ்பம்..வெயிட்லாஸ்  முதல் தலைமுடி வளர்ச்சி வரை | Do you know Health Benefits of Hibiscus Leaf  and Hibiscus Leaves ...

கஷாயம்:

இந்த இலையில் டீ அல்லது கஷாயம் வைத்து குடித்தால், ரத்த அழுத்த பிரச்சனைகள் மெல்ல குறையும்.. கெட்ட கொழுப்பை இந்த செம்பருத்தி இலைகள் குறைக்கின்றன.. குறிப்பாக, தமனிகளின் உள்ளே, அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவைகள் குறைக்கின்றன. அதேபோல, செம்பருத்தி இலையில் வைட்டமின் C நிரம்பி உள்ளதால், இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. இந்த டீயை தொடர்ந்து குடித்துவரும்போது, மாதவிடாய் சீராகும்.. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியும் குறையும்.. எனவே, ஈஸ்ட்ரோஜன் குறைவாக உள்ள பெண்கள் இந்த செம்பருத்தி இலை டீயை தவறவிடக்கூடாது. மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், இந்த டீயை குடித்து வந்தால், மனம் அமைதி பெறும்..

புற்றுநோய்:

புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு இந்த செம்பருத்தி இலைகள் தூண்டுகோலாக விளங்குகின்றன.. அதனால்தான், புற்றுநோயால் ஏற்பட்ட புண்களை ஆற்ற, இந்த இலைகளை அரைத்து பற்றுபோல பூசுவார்கள்.. தலைமுடி மற்றும் சரும பாதுகாப்பில் செம்பருத்தி இலைகள் வரப்பிரசாதமாக திகழ்கின்றன.. ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள இந்த இலைகள், முக சுருக்கத்தை தள்ளிப்போடக்கூடியவை.. இளமையை தக்க வைக்கக்கூடியவை. அதனால்தான், அழகு சாதன பொருட்களில் மூலப்பொருளாக செம்பருத்தி இலைகள் கட்டாயம் இடம்பெறுகின்றன.

கண்டிஷனர்:

தலைமுடிக்கு இந்த இலை போல, இயற்கையான பெஸ்ட் கண்டிஷனர் வேறு எதுவும் இருக்க முடியாது.. பளபளப்பு + மென்மைத்தனம் இரண்டுமே கிடைக்க வேண்டுமானால், இந்த இலைகளை அரைத்து தேய்த்தாலே போதும்.

அதேபோல, முடி அதிகமாக வளர வேண்டுமானால், அல்லது முடி அதிகமாக கொட்டுகிறது என்றால், இந்த இலையின் விழுதே போதுமானது.. நரைமுடி, பொடுகுத்தொல்லை இருந்தாலும், இந்த இலைகளுடன், சிறிது கறிவேப்பிலை, மருதாணி இலை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலே, மொத்த பிரச்சனையும் தீரும்..

சிறப்புகள்:

செம்பருத்தி இலைகளை அரைத்து, இட்லி மாவில் கலந்து, தோசை ஊற்றி சாப்பிடுவார்கள்..

இதனால், அஜீரணம் நீங்குவதுடன், உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் வெளியேற இவை துணைபுகின்றன.. மேலும், உடல் சூடு தணிந்து, உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கிறது.. வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. அதனால்தான், இன்றுவரை ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் மிக முக்கியத்தை பெற்று வருகின்றன.

Related Post

கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது

Posted by - December 3, 2022 0
மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை…

அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

Posted by - January 8, 2024 0
சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா? அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த…

வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகுது கனமழை!

Posted by - November 14, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆங்காங்கே விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த…

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து…

Posted by - March 3, 2025 0
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 8 லட்சத்திற்கும் அதிகமான…

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - November 21, 2023 0
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *