முருங்கையிலை மாதிரி.. செம்பருத்தி இலை.. இயற்கையின் தங்கபஸ்பம்..வெயிட்லாஸ் முதல் தலைமுடி வளர்ச்சி வரை

296 0

சென்னை:

முருங்கையிலை போலவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள இலைகளில் மிக முக்கியமானது செம்பருத்தி இலைகள்.. செம்பரத்தை இலைகள் என்றும் சொல்வார்கள்.

செம்பருத்தி செடியை பொறுத்தவரை, இதன் பூக்கள், விழுதுகள், இலைகள் என அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. வழுவழுப்பு தன்மை உடைய இந்த இலைகள் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தவை. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெறும் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடித்தாலே போதும்… உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய கோளாறுகள் நீங்கும்.

கண் எரிச்சல், கண் நோய்கள், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல், கண்களில் கட்டி போன்ற சூட்டை கிளப்பக்கூடிய பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாகும்.. அதேபோல, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனை இருந்தாலும், இந்த தண்ணீரே அருமருந்தாகிறது.முருங்கையிலை மாதிரி.. செம்பருத்தி இலை.. இயற்கையின் தங்கபஸ்பம்..வெயிட்லாஸ்  முதல் தலைமுடி வளர்ச்சி வரை | Do you know Health Benefits of Hibiscus Leaf  and Hibiscus Leaves ...

கஷாயம்:

இந்த இலையில் டீ அல்லது கஷாயம் வைத்து குடித்தால், ரத்த அழுத்த பிரச்சனைகள் மெல்ல குறையும்.. கெட்ட கொழுப்பை இந்த செம்பருத்தி இலைகள் குறைக்கின்றன.. குறிப்பாக, தமனிகளின் உள்ளே, அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவைகள் குறைக்கின்றன. அதேபோல, செம்பருத்தி இலையில் வைட்டமின் C நிரம்பி உள்ளதால், இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. இந்த டீயை தொடர்ந்து குடித்துவரும்போது, மாதவிடாய் சீராகும்.. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியும் குறையும்.. எனவே, ஈஸ்ட்ரோஜன் குறைவாக உள்ள பெண்கள் இந்த செம்பருத்தி இலை டீயை தவறவிடக்கூடாது. மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், இந்த டீயை குடித்து வந்தால், மனம் அமைதி பெறும்..

புற்றுநோய்:

புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு இந்த செம்பருத்தி இலைகள் தூண்டுகோலாக விளங்குகின்றன.. அதனால்தான், புற்றுநோயால் ஏற்பட்ட புண்களை ஆற்ற, இந்த இலைகளை அரைத்து பற்றுபோல பூசுவார்கள்.. தலைமுடி மற்றும் சரும பாதுகாப்பில் செம்பருத்தி இலைகள் வரப்பிரசாதமாக திகழ்கின்றன.. ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள இந்த இலைகள், முக சுருக்கத்தை தள்ளிப்போடக்கூடியவை.. இளமையை தக்க வைக்கக்கூடியவை. அதனால்தான், அழகு சாதன பொருட்களில் மூலப்பொருளாக செம்பருத்தி இலைகள் கட்டாயம் இடம்பெறுகின்றன.

கண்டிஷனர்:

தலைமுடிக்கு இந்த இலை போல, இயற்கையான பெஸ்ட் கண்டிஷனர் வேறு எதுவும் இருக்க முடியாது.. பளபளப்பு + மென்மைத்தனம் இரண்டுமே கிடைக்க வேண்டுமானால், இந்த இலைகளை அரைத்து தேய்த்தாலே போதும்.

அதேபோல, முடி அதிகமாக வளர வேண்டுமானால், அல்லது முடி அதிகமாக கொட்டுகிறது என்றால், இந்த இலையின் விழுதே போதுமானது.. நரைமுடி, பொடுகுத்தொல்லை இருந்தாலும், இந்த இலைகளுடன், சிறிது கறிவேப்பிலை, மருதாணி இலை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலே, மொத்த பிரச்சனையும் தீரும்..

சிறப்புகள்:

செம்பருத்தி இலைகளை அரைத்து, இட்லி மாவில் கலந்து, தோசை ஊற்றி சாப்பிடுவார்கள்..

இதனால், அஜீரணம் நீங்குவதுடன், உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் வெளியேற இவை துணைபுகின்றன.. மேலும், உடல் சூடு தணிந்து, உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கிறது.. வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. அதனால்தான், இன்றுவரை ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் மிக முக்கியத்தை பெற்று வருகின்றன.

Related Post

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

Posted by - January 2, 2024 0
திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர்…

ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026

Posted by - March 29, 2025 0
 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் ஆளும் திமுகவை எதிர்கொள்ள, தவெக தலைவர் விஜய் வலுவான வியூகங்களை வகுத்து வருகிறார். வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம்…

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் – புகைப்படங்கள்!

Posted by - January 27, 2023 0
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…

விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் – பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்ட பிரேமலதா

Posted by - May 10, 2024 0
விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார். மறைந்த தேமுதி நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு…

”சீமானுக்கு மரியாதை இல்லை” பெரியார் விவகாரம், கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

Posted by - January 31, 2025 0
பெரியாரை விமர்சித்து வரும் சீமானுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை என முதலமைச்சர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *