ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

268 0

சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது.

ஐபிஎல் ப்ளே-ஆப் சுற்றுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இன்று டெல்லி அணியுடன் சென்னை அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளும் பிளே-ஆப் வாய்ப்பில் நீடிப்பதால் சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டியது கட்டாயத்தில் உள்ளது.

வெற்றிபெறும் பட்சத்தில், 2-வது இடத்தை உறுதிசெய்யவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒருவேளை தோல்வி அடைந்தால், மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே சென்னை அணியின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதேபோன்று, இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் லக்னோ அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. சென்னை, லக்னோ அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை இன்றைய நாள் தீர்மானிக்கும் என்பதால், இந்த இரு போட்டிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Post

Generated Image February 16 2026 10 25AM

பாகிஸ்தானின் பரிதாபம்.. போற போக்கில் வெற்றி பெற்ற இந்தியா!

Posted by - February 16, 2026 0
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. இதனால், சூப்பர் 8 சுற்றில் இந்தியா கால்தடம் பதித்தது. IND vs PAK…

ஜடேஜாவை தூக்கிவைத்து கொண்டாடிய தோனி… வைரலாகும் புகைப்படம்

Posted by - May 30, 2023 0
கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது, அதனை பவுண்டரியாக மாற்றி ஜடேஜா அணியை வெற்றி பெற வைத்தார் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10…
t20

வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா?

Posted by - March 8, 2026 0
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப்யாதவ் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து…

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்!

Posted by - April 9, 2025 0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்…

மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

Posted by - March 18, 2024 0
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *