மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது வழக்கு பதிவு

177 0

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது வழக்கு பதிவு

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இ.பி., சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பிரச்சாரம் செய்தார்.

அப்போது விதிமுறைகளை மீறி சின்னம் பொறிக்கப்பட்ட பதாகைகள், தோரணங்கள், கொடிகள் கட்டப்பட்டிருந்தது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் வினோத்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதையடுத்து, மதிமுக வேட்பாளர் துரை வைகோ, வட்டச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் மீது கோட்டை காவல் நிலைய போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.

Related Post

“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Posted by - December 5, 2024 0
தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியல் செய்து…

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

Posted by - December 26, 2024 0
சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க…

காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்

Posted by - July 10, 2023 0
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் இன்று காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி…

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு: தாம்பரம் 2-வது இடம் பிடித்தது

Posted by - August 14, 2023 0
திருச்சி: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *