கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! – தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் – என்ன விஷயம் தெரியுமா.?

258 0

2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேமுதிக ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான் கூட்டணிக்கு 40 என்ற புதிய மந்திரம். அது என்ன தெரியுமா.?

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

“கூட்டணி வைக்க வேண்டும் என்றால் 40 தொகுதிகள் வேண்டும்“

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தொகுதி வாரியாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, பிரேமலதாவிடம் நிர்வாகிகள் பல்வேறு முக்கிய கருத்துக்களை முன்வைத்ததாக தெரிகிறது. அதன்படி, எந்த கட்சியுடன் கூட்டணிக்கு சென்றாலும், அவர்களிடம் 40 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தேமுதிக-விற்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ, அவர்களுடனேயே கூட்டணி வைக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஏனென்றால், கடந்த தேர்தலின் போது அதிமுக தங்களை சரியாக மதிக்கவில்லை என்றும் முழுமையான ஒத்துழைப்பை தரவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நிர்வாகிகள் வைத்த மற்ற கோரிக்கைகள் என்ன.?

அதோடு ஒரு முக்கிய கோரிக்கையாக, தேமுதிக-விற்கான தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், 6 மாதங்களுக்கு ஒரு முறை பல்வேறு தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், தேமுதிகவிற்கு சாதகமாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து, அந்த தொகுதிகளை பலப்படுத்துவதுடன், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அந்த தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதோடு, கட்சிக்காக செலவு செய்வதற்கு நிர்வாகிகளிடம் போதிய அளவிற்கு பணம் இல்லை என்றும், தேர்தல் செலவுகளுக்காக தலைமைக் கழகத்தில் இருந்து பணம் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

“அதிமுக, பாஜக எதுவும் செய்யவில்லை“

மொத்தத்தில், பாஜக, அதிமுக கூட்டணி நமக்கு எதுவும் செய்யவில்லை என்றும், அதனால், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் எனவும், தேமுதிகவிற்கு அங்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தலுருக்கான நாட்கள் வேகமாக கரைந்து வரும் நிலையில், முக்கிய கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. ஆனால், தேமுதிக அந்த விஷயத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. எந்த பக்கம் சாய்வது என்ற முடிவை இன்னும் அந்த கட்சியின் தலைமை எடுக்கவில்லை.

சரியான நேரம் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயாகாந்த் கூறி வருகிறார். அந்த நேரம் எப்போது வருமோ என அக்கட்சியின் தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

 

Related Post

எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜீவானந்தம் வைத்த ட்விஸ்ட்.. நான்கு மருமகளிடம் சிக்கி சின்னாபின்னமாக போகும் குணசேகரன்

Posted by - December 20, 2024 0
முடிந்து போன ஒரு சீரியலுக்கு இந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது முழுக்க முழுக்க எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டுமே. யாருமே எதிர்பார்க்காத வகையில் அவசர…

இன்று 11 மாவட்டங்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Posted by - December 11, 2022 0
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு…
Generated Image November 13 2025 10 04AM

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

Posted by - December 2, 2025 0
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…

கருணை இருக்கு…நிதி இல்லை; பேரவையில் ஸ்டாலின் விளக்கம்…

Posted by - January 11, 2025 0
பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்புடன் பணம் வழங்காததற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசிடம் கருணை இருக்கு ஆனா நிதி இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொங்கல்…

பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அலட்சியபடுத்திய தமிழக அரசு…பொங்கி எழுந்த இடைநிலை ஆசிரியர்கள்…

Posted by - February 29, 2024 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *