மதுவுக்கு அடிமையானவரா நீங்கள்.? – அதன் அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்வது?

386 0

தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை எப்படி கண்டறிவது?

இன்றைய சூழலில் மது அருந்தாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு மதுப்பழக்கம் வாடிக்கையாகிவிட்டது. அதிலும் கட்டுப்பாடு இல்லாமல் மது அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு நாளடைவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எப்போதாவது குதூகலமாக இருப்பதற்கு என்று மது அருந்தும் பழக்கம் மாறி, மது அருந்தாமல் இன்றைய பொழுதை கடந்து செல்லவே இயலாது என்ற அளவுக்கு சிலர் அதற்கு அடிமையாகவும் இருக்கின்றனர்.

மதுவுக்கு அடிமையானவர்களுக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் எண்ணற்ற சிக்கல்கள் உண்டாகும். குடும்ப உறவுகள் மத்தியில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு, இதய நோய், மன அழுத்தம், கவலை போன்ற சிக்கல்கள் உண்டாகும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நாளடைவில் உயிரிழப்பு ஏற்படும். எனவே ஆரம்பத்திலேயே மது பழக்கதிலிருந்து விடுபடுவது அவசியம்.

ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை எப்படி கண்டறிவது?

மதுவை தேடுவது : 

ஒரு நொடிப் பொழுது கூட மது என்ற சிந்தனையின்றி இவர்களது வாழ்க்கை நகராது. தூங்கி கண் விழித்த பொழுதில் கூட மதுவை தேடி ஓடுபவர்கள் இருக்கின்றனர். இவர்களால் மது அருந்தும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. சிலர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியாமல் மறைந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

எதிர்மறை விளைவுகள் குறித்து கவலை கிடையாது : 

மது அருந்துவதால் எத்தகைய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது இவர்களுக்கு தெரியும். தன்னுடைய உடல் நலனுக்கும் சரி, குடும்பத்திற்கும் சரி, மதுவால் தீமைகள் ஏற்படும் என்று தெரிந்தாலும் அதற்கு இவர்களின் மனம் கவலை கொள்ளாது. மாறாக குடித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.

சகிப்பற்றதன்மை மற்றும் முன்னுரிமை :

சராசரியாக மற்ற நபர்கள் அருந்துகின்ற அளவுக்கான மது இவர்களுக்கு போதுமானதாக இருக்காது. இன்னும் நிறைய அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலருக்கு மது அருந்தாவிட்டால் உடல் நடுக்கம் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைக் காட்டிலும் மதுவுடன் பொழுது கழிக்கவே அதிக விருப்பம் கொள்வார்கள். கையில் கிடைக்கும் பணத்தை எல்லாம் குடித்தே தீர்க்கும் மனநிலை உடையவர்களாக இருப்பார்கள்.

போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

மதுவை கைவிடுவதற்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் எடுத்துக் கொள்ளலாம். உள்நோயாளியாகவும் சிகிச்சை பெறலாம்.
மனதிற்கு மகிழ்ச்சியை தருகின்ற பிற நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துதல் மற்றும் ஆர்வம் கொண்டிருத்தல் மூலமாக மதுவுக்கான சிந்தனையை மட்டுப்படுத்தலாம்.
போதை மறுவாழ்வு மையங்களில் சேர்ந்து தியானம், யோகா போன்ற பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்தால் பலன் கிடைக்கும்.
மதுவுக்கு எதிரான சிந்தனை கொண்ட நண்பர்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து பழகலாம்.

Related Post

இடுப்பில் கை வைத்து சிலுமிஷம் செய்த நபர், பளார் விட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன நடந்தது?

Posted by - April 4, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வெற்றிகரமாக TRP அதிகம் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் ராதிகா கொடுக்கும் இடையூறுகளை சமாளித்து வெற்றிப்பெற்று வருகிறார் பாக்கியா.…

காலை வெறும் வயிற்றில் இதை குடித்தால் உடலில் என்ன மாற்றம்? மருத்துவர்கள் சொல்லும் உண்மை

Posted by - February 9, 2026 0
இன்றைய வாழ்க்கை முறையில் பலர் வயிற்றுப் பிரச்சனை, உடல் சோர்வு, எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒரு எளிய தீர்வாக, காலை வெறும் வயிற்றில்…

TRP-யை உயர்த்த மீண்டும் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல்கள்.. எதுல தெரியுமா?

Posted by - November 12, 2024 0
சன் டிவி விஜய் டிவி எத்தனையோ சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வந்தாலும், ஹிந்தி டப் சீரியல்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குறைந்த பாடில்லை.…

எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்……..

Posted by - March 9, 2024 0
வாரம் வாரம் சீரியல் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும். சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இல்லத்தரசிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் சீரியல் பார்த்து…

உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்க தண்ணீர் மட்டும் போதாது.. இவற்றையும் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தும் நிபுணர்..!

Posted by - April 19, 2023 0
தண்ணீருக்கு பல நன்மைகள் இருக்கும்போது, அதிகபட்ச நன்மைக்காக அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை தற்போது நாம் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலம் வந்தாச்சு. வெயிலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *