மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

206 0

 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த வகையில் இருக்கும் என்பதை இங்கு காணலாம்.

பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில், சிறு குறு நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் பொம்பை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மத்திய பட்ஜெட் எப்படி என்பது குறித்து அந்தந்த தொழிலாளர்கள், நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் மிதுன் கூறுகையில், “இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க விஷயங்களும் இருக்கு. ஏமாற்றங்களுக்கான விஷயங்களும் இருக்கு. வரவேற்கத்தக்க விஷயங்கள் என்ன என்று பார்த்தால், சிறு, குறு தொழிகளுக்கு கடன் வரம்பை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு உயர்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டிருந்தோம். ரூ.20 கோடி வரை கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் ரூ.10 கோடி வரை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

சிறு குறு தொழில்களுக்கு கிரெடிட் கார்டு கொடுப்பதாக கூறியுள்ளனர். குழாய் மூலம் குடிநீர் அளிக்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028க்குள் எல்லாருக்கும் கொண்டு போய் சேர்ப்போம் என சொல்லியிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் பைப் விற்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறைய தொழிலாளர்கள் அதன்மூலம் பயன்பெற முடியும்.

ஏமாற்றம் என்வென்று பார்த்தால், தொழில் இப்போது மந்த நிலையில் உள்ளது. இதனால் வட்டி 20 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் பண்ணித்தர வேண்டும் என கேட்டிருந்தோம். அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சிறு குறு தொழில்களுக்கு வட்டியில் மாணியம் கேட்டிருந்தோம். அப்போதுதான் மந்த நிலையில் இருந்து வெளியே வர முடியும். அதற்காக கேட்டிருந்தோம். அது வரல. மூலப்பொருள் வங்கி கேட்டிருந்தோம். அதுவும் வரவில்லை. எக்ஸ்போர்ட் க்ளசர் கேட்டிருந்தோம். அதுவும் வரல.

இதனால் ஏற்கெனவே இருக்கும் பாரத்தை மீண்டும் சுமக்கவே வழிவகுக்கிறது” எனத் தெரிவித்தார்.

Related Post

காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம் …

Posted by - March 11, 2025 0
காதல்… 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று…

ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் இதுதான் – ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம்

Posted by - July 4, 2023 0
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ்…

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி… அண்ணாமலை அதிரடி பேட்டி

Posted by - April 6, 2023 0
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக…

மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்… மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதால் பரபரப்பு

Posted by - August 28, 2024 0
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெண் மருத்துவர்…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

Posted by - December 7, 2023 0
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *