அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

209 0

சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருக்கின்றன. இதில் 8.4 சதவீதம் புரதச் சத்து, 1.4 சதவீதம் கொழுப்புச் சத்து, 3.1 சதவீதம் தாது உப்புகள் உள்ளிட்டவை உள்ளன.

அகத்தி கீரை இரு வகைப்படும். ஒன்று வெள்ளை நிற அகத்தி கீரை. இது வெள்ளை பூக்களை கொண்டது. அது போல் சிகப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி கீரை. இவை இரண்டுமே மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன்  மட்டும் சாப்பிடாதீர்கள்! | Do you know the benefits of Agathi Keerai? -  Tamil Oneindia

அகத்தி கீரை உணவை எளிதில் ஜீரணமாக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும். உடலின் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சியாகும். அல்சர் உள்ளிட்ட வயிற்றுப்புண் குணமாகும். இந்த அகத்திக் கீரையை சேற்றுப்புண்களில் தடவினால் அது விரைவில் குணமாகும். தேமல் வந்த இடத்தில் கீரையை தடவினாலும் குணமாகும். இந்த கீரையின் சாற்றுடன் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது பூசினால் அவை பூப்போல் உதிர்ந்துவிடும். தலைச்சுற்றல், கண் எரிச்சல், போன்ற பிரச்சினைகள் குணமாகும். பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்த அகத்திக் கீரை பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள விஷம் வெளியேறும்.

இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும். விஷம் குடித்தவர்கள் அகத்திப்பட்டை கசாயத்தை 50 கிராம் எடுத்துக் கொண்டு 8 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால் அந்த விஷமே முறிந்துவிடும். உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும். ஆண், பெண் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சலையும் நீக்கும்.

சித்த மருத்துவம் சாப்பிடுவோர் இந்த கீரையை எடுத்துக் கொள்ளக் கூடாது. ரியாக்ஷன் அதிகமாகி சிரங்கு ஏற்படும். அகத்திக் கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. மது அருந்தியவர்களும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. மது அருந்திவிட்டு இந்த கீரையை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்.

நுரையீரலை பாதுகாக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், சருமத்திற்கு சிறந்தது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும், சைனஸை குணப்படுத்தும். ரத்த கொதிப்பு, கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்கும். மலமிலக்கியாக செயல்படுகிறது. வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை அழிக்கிறது. பித்தத்தை சமன் செய்துவிடுகிறது. குடல் புண், தொண்டை வலி, தொண்டை புண்ணை நீக்கும்.

Related Post

Generated Image February 09 2026 9 54AM

டாஸ்மாக் கடைகள் இயங்காது.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

Posted by - February 9, 2026 0
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் திறக்கப்படாது…

திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

Posted by - May 29, 2023 0
அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…
death 1

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில்…

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி! அண்ணாமலை பதவி பறிக்கப்பட்ட உடனே அறிவிப்பு!

Posted by - April 11, 2025 0
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதை அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவித்தனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?

Posted by - March 28, 2025 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *