அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

187 0

சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருக்கின்றன. இதில் 8.4 சதவீதம் புரதச் சத்து, 1.4 சதவீதம் கொழுப்புச் சத்து, 3.1 சதவீதம் தாது உப்புகள் உள்ளிட்டவை உள்ளன.

அகத்தி கீரை இரு வகைப்படும். ஒன்று வெள்ளை நிற அகத்தி கீரை. இது வெள்ளை பூக்களை கொண்டது. அது போல் சிகப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி கீரை. இவை இரண்டுமே மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன்  மட்டும் சாப்பிடாதீர்கள்! | Do you know the benefits of Agathi Keerai? -  Tamil Oneindia

அகத்தி கீரை உணவை எளிதில் ஜீரணமாக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும். உடலின் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சியாகும். அல்சர் உள்ளிட்ட வயிற்றுப்புண் குணமாகும். இந்த அகத்திக் கீரையை சேற்றுப்புண்களில் தடவினால் அது விரைவில் குணமாகும். தேமல் வந்த இடத்தில் கீரையை தடவினாலும் குணமாகும். இந்த கீரையின் சாற்றுடன் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது பூசினால் அவை பூப்போல் உதிர்ந்துவிடும். தலைச்சுற்றல், கண் எரிச்சல், போன்ற பிரச்சினைகள் குணமாகும். பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்த அகத்திக் கீரை பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள விஷம் வெளியேறும்.

இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும். விஷம் குடித்தவர்கள் அகத்திப்பட்டை கசாயத்தை 50 கிராம் எடுத்துக் கொண்டு 8 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால் அந்த விஷமே முறிந்துவிடும். உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும். ஆண், பெண் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சலையும் நீக்கும்.

சித்த மருத்துவம் சாப்பிடுவோர் இந்த கீரையை எடுத்துக் கொள்ளக் கூடாது. ரியாக்ஷன் அதிகமாகி சிரங்கு ஏற்படும். அகத்திக் கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. மது அருந்தியவர்களும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. மது அருந்திவிட்டு இந்த கீரையை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்.

நுரையீரலை பாதுகாக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், சருமத்திற்கு சிறந்தது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும், சைனஸை குணப்படுத்தும். ரத்த கொதிப்பு, கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்கும். மலமிலக்கியாக செயல்படுகிறது. வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை அழிக்கிறது. பித்தத்தை சமன் செய்துவிடுகிறது. குடல் புண், தொண்டை வலி, தொண்டை புண்ணை நீக்கும்.

Related Post

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

Posted by - November 30, 2024 0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது…

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

Posted by - November 4, 2025 0
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்க 5 மணி நேரம் தாமதமானது ஏன் என்பது குறித்து மாநகரக் காவல் ஆணையர்  சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து …

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *