மெட்ரோ ரெயில் பணி: ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

234 0

திருப்போரூர்:

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45 கி.மீட்டர் தூரத்துக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீட்டர் தூரத்துக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மெட்ரோ பணிகள்... சென்னையில் இந்த ஏரியாக்களில் 6 மாதம் போக்குவரத்து மாற்றம்  | Indian Express Tamil

தற்போது மெட்ரோ ரெயில் பணிக்காக ராட்சத எந்திரம் மூலம் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் முதல் பெருங்குடி வரை ஓ.எம்.ஆர் சாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவே பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் தொடர்ந்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை கந்தன் சாவடி முதல் கண்ணகி நகர் வரை சுமார் 5 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் அவ்வழியே வந்த தனியார் நிறுவன பஸ்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றன.

இதனால் வேலைக்கு செல்வோர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோரும் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கண்ணகி நகர் துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி முழுவதும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

5 கி.மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஒரு மணிநேரம் வரை ஆனது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘மெட்ரோ ரெயில் பணியால் ஓ.எம்.ஆர். சாலையில் தினந்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்வதே கடினமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Post

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்- காரணம் என்ன?

Posted by - March 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…

முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் “சூப்பர்” சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில் முலாம்பழத்தை சாப்பிடலாமா?

Posted by - January 9, 2024 0
சென்னை: முலாம்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முலாம்பழம் ஜூஸ் சாப்பிட்டாலே போதும், ஏகப்பட்ட உபாதைகள் தீரும். வைட்டமின் A, B, C, B1, B6 K, கால்சியம்,…

Pongal Gift: பொங்கல் தொகுப்பு – என்னென்ன பொருட்கள் கொடுக்கப்படும்? கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு

Posted by - December 13, 2024 0
இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/-…

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது பெண் போக்சோவில் கைது..! நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Posted by - December 17, 2022 0
சிறுவனின் தந்தை தனது மகனை ஏமாற்றி சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாகையில் 17 வயது…

ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

Posted by - February 18, 2025 0
ஆசிரியர் பணி நியமனத்திற்கு இனி ”காவல்துறை சரிபார்ப்பு சான்று” கட்டாயமாக்கப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *