வாய் தவறி வந்துடுச்சு.. திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

33 0

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருப்பவர் நயினார் நாகேந்திரன். முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்யை நயினார் விமர்சித்து பேசும்போது “அவர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், த்ரிஷாவை விட்டுவிட்டு வர வேண்டும்” என பேசினார்.

விஜய் – த்ரிஷா இருவரையும் இணைத்து அவர் பேசியது சர்ச்சையாக வெடித்த நிலையில் பிரபலங்கள் பலரும் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

த்ரிஷாவும் கடும் கோபமாக தனது வக்கீல் மூலமாக அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்டிருக்கிறார். வாய் தவறி அப்படி பேசிவிட்டதாக குறிப்பிட்டு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைமை மற்றும் அண்ணாமலை ஆகியோர் இது பற்றி தன்னிடம் பேசியதாக குறிப்பிட்ட அவர்..

“நான் தனிநபர் விமர்சனம் செய்தது இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி இருக்கிறார்.

Related Post

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - March 31, 2026 0
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முதலமைச்சர் ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு 3 கோடியே…

விஜய்க்கு விசில் சின்னம்..

Posted by - January 22, 2026 0
முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக-விற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய…

மனம் திறந்த ஓபிஎஸ்.பொறுமையாக இருந்தது ஏன்?

Posted by - February 24, 2026 0
ஒன்றிணைந்தால்தான் வெல்ல முடியும் என்று நான் சொன்னது தவறா? இன்று கட்சியின் நிலை எப்படி இருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது அதிமுக- ஓபிஎஸ். கட்சி விதியை…

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Posted by - November 17, 2025 0
அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை…

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

Posted by - January 18, 2026 0
ACTO-GEO அமைப்பு 2021 தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி , பிப்.3 முதல் காலவரையறை அற்ற வேலை நிறுத்தப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *