’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் – திருவாரூர்ன்னா சும்மாவா?

142 0

‘விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருவாரூரில் சனிக்கிழமை பிரச்சாரம் செய்த நிலையில், அவர் பிரச்சாரம் செய்த அதே திருவாரூர் தெற்கு வீதியில் அடுத்த நாளான ஞாயிற்றுக் கிழமை மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் ஒரு பொதுக்கூட்டத்தை உடனடியாக ஏற்பாடு செய்தார். அவர் ஏற்பாடு செய்த அந்த பொதுக்கூட்டத்திற்கு ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் திரண்டனர்.

விஜய்க்கு திமுக என்பது யார் ? என காட்டிய திருவாரூர் கூட்டம்

நாகை, திருவாரூர் என்று இரு மாவட்டங்களில் சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார் விஜய். அவர் பரப்புரையின்போது திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்ததோடு, தனக்கு கூடிய கூட்டத்தை பார்த்து பலருக்கு அச்சம் வந்துள்ளதாக பேசினார். அவர் பேசிய இடம் திருவாரூர் என்பதால், திருவாரூர் திமுகவின் பலம் என்ன என்பதை ஒரே நாளில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அக்கட்சி மாவட்டச் செயலாலர், விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் ஒரே நாளில் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் திரண்டு ஆரவாரம் செய்தனர். அப்போது பலரும் இதுதான் திமுகவின் பலமே என்றும் இப்படி ஒரு கூட்டத்தை ஒரே நாளில் விஜயால் கூட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஓரணியில் தமிழ்நாடு உறுதியேற்பு கூட்டம்

திமுகவின் முக்கியமான முன்னெடுப்பான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் அடுத்தக் கட்டமான தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன் என்ற உறுதியேற்பு கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றனர். திருவாரூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

விஜயை சீண்டிய கே.என்.நேரு

இந்த கூட்டத்தில் பேசிய திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, ’நான் பூண்டி கலைவாணனை அழைத்து சொன்னேன், முதல்நாள்தான் அவரு (விஜய்) இங்கே வந்து பேசிவிட்டு போகிறார். அதே இடத்தில் கூட்டம் போடுகிறேன் என்கிறாயே? என்றேன். அதற்கு கலைவாணன் சொன்னா. ‘அதெல்லாம் ஒரு கூட்டமா? வா அண்ணே, அந்த கூட்டத்தை அடிச்சு காட்டுகிறேன்’ என்றார். அதே மாதிரி ஆயிரக்கணக்கான திமுகவினரை திரட்டி, நேற்று வந்த கூட்டம் ஒரு கூட்டமே இல்லை என்பதை அடித்துக் காட்டியிருக்கிறார் பூண்டி கலைவாணன் என்றார். அதோடு, அவர் (விஜய்) சொல்கிறார். தேர்தலில் அவருக்கும் திமுகவிற்கும்தான் போட்டி என்று, ‘தம்பி, திமுகவோடு போட்டிப் போட உனக்கெல்லாம் தகுதியே இல்லை’ என்று கே.என்.நேரு பேசியதும் கூடியிருந்த திமுகவினர் அனைவரும் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர்.

Related Post

hq720

கும்​பகோணம் த.வெ.க வேட்​பாளர் புது முயற்சி….

Posted by - April 14, 2026 0
ஹாலோகி​ராம்’ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி தவெக தலை​வர் விஜய் நேரில் பிரச்​சா​ரம் செய்​வது போல புதிய முயற்​சியை கும்​பகோணம் தவெக வேட்​பாளர் மேற்​கொண்​டுள்​ளார். தவெக தலை​வர் விஜய் தனது…

தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் – என்ன செய்யப்போகிறார் விஜய்?

Posted by - July 28, 2025 0
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருவதால் தவெக என்ன செய்யப்போகிறது? என்ற…
sasikala

நான் ஜெயலலிதாவை கொன்றேனா?

Posted by - February 25, 2026 0
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது…

தேர்தலுக்கு தயாரான அதிமுக.!

Posted by - December 11, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைப்பு…
ASDFGH

தவெக கூட்டணிக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

Posted by - February 27, 2026 0
காங்கிரஸும் எங்களுடன் கைகோத்தால் வெற்றி உறுதி. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 70 தொகுதிகள் தரத் தயாராக இருக்கிறோம்’ என தவெக தரப்பு சொல்லியிருக்கிறது. தவெக-வுடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *