sasikala

நான் ஜெயலலிதாவை கொன்றேனா?

112 0

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது என கூறியுள்ளார்.

ஜெயலலிதா இறந்த அன்று என்னை முதலமைச்சராக பதிவியேற்க சொல்லி அப்போதைய அதிமுக அமைச்சர்கள் வலியுறுத்தியதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தலைகீழ் மாற்றம்

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் உடல்நிலை குறைவு காரணமாக அதே ஆண்டு டிசம்பரில் அவர் உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக செயல்பட்டு வந்தார். இதற்கிடையில் சசிகலாவை முதலமைச்சராக்கும் பணிகள் நடக்க, அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை தண்டனை அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்த செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். சசிகலா தண்டனைக் காலம் முடிந்து வருவதற்குள் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். பிரிந்து கிடந்த ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்து நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியை நடத்தினர். பின்னர் 2022ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

சசிகலாவின் புதிய கட்சி

இந்த நிலையில் 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது என தெரிவித்துள்ளார். அதாவது, “2016ம் ஆண்டு தேர்தல் முடிந்து ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். நான் அவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு நல்ல நாள் பார்த்து வைத்திருந்தேன்.

ஆனால் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மாரடைப்பு வந்து விட்டது. அதனால் தான் அவர் உயிரிழந்து விட்டார். அதேசமயம் வெளியில் எதிரிகளெல்லாம் நான் தான் ஜெயலலிதாவை கொன்று விட்டேன் என கதை கட்டி விட்டார்கள். இதெல்லாம் யாராவது நம்புவாங்களா?. நீங்கள் அரசியலுக்காக சொன்னால் அது எப்படி உண்மையாகும்?. எல்லாவற்றையும் நாம் பார்த்தோம்.

ஜெயலலிதா இறந்த பிறகு அன்று இரவே அவர் சிகிச்சைப் பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் அப்போதைய அதிமுக அமைச்சர்கள் அனைவரும் வந்து என்னைப் பார்க்கிறார். சின்னம்மா நீங்கள் முதலமைச்சராகி விடுங்கள் என சொன்னார்கள். எல்லா எம்.எல்.ஏ.,க்களும் அப்படியே வந்து சொன்னார்கள்.

நான் அதற்கு, ஒரு அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை. என் சொந்த அக்காவாக மட்டுமே அவரை நினைத்தேன். அதனால் அக்கா இறந்திருக்காங்க. இப்போது என்னால் முதலமைச்சராக பதவியேற்க முடியாது. அவருக்கு செய்ய வேண்டிய காரியத்தை ஜெயலலிதா முறைப்படி வீட்டில் செய்ய வேண்டி இருக்கிறது.  எனவே ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கட்டும். அமைச்சர்கள் அப்படியே இருக்கட்டும். நடுவில் செங்கோட்டையனை அமைச்சரவையில் நீக்கப்பட்ட நிலையில் அவரை சேர்க்க வேண்டும் என சொன்னேன். இருப்பவர்கள் முதலில் பதவியேற்க சொல்ல, அன்று இரவே அனைவரும் பதவியேற்றனர்.

Related Post

Gemini Generated Image t4hwvit4hwvit4hw

500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

Posted by - March 30, 2026 0
தங்கம், வெள்ளி, பணம், கார்கள்… தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196)…

தவெகவை முடக்க முயற்சி செய்தனர்; அவர்களின் எண்ணம் ஈடேறாது: சிடிஆர் நிர்மல் குமார்

Posted by - October 29, 2025 0
சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர்” என அக்கட்சியின் இணை…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…
aiadmk eps

“100% நம்பிக்கையோடு உள்ளேன்” – சேலத்தில் குடும்பத்துடன் வாக்களித்த இபிஎஸ் பேட்டி

Posted by - April 23, 2026 0
மேட்டூர்: “வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். 100% நம்பிக்கையோடு உள்ளேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி,…
Generated Image January 07 2026 5 03PM 1

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - January 7, 2026 0
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *