வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: உஷார் நிலையில் விமான நிலையங்கள்!

279 0

வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சீனாவில் கொரோனா BF.7 வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் அதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று ஒரு நாளில் புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3, 428 ஆக உயர்ந்துள்ளது. இதில் சீனாவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய நபரும் அடங்குவார். அவர், உருமாறிய BF7 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய, பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பீகார் மாநிலம் கயா விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் மியான்மர் சேர்ந்த அவர்கள், ஹோட்டல் ஒன்றில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோலவே கொல்கத்தா விமான நிலையம் வந்த வெளிநாட்டைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அதில் ஒருவர் துபாயைச் சேர்ந்தவர், மற்றொருவர் மலேசியாவைச் சேர்ந்தவர். இருவரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Post

பிரதமர் மோடிக்கு நன்றி – ரஜினிகாந்த் ட்வீட்…

Posted by - May 28, 2023 0
குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். – இளையராஜா தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.…

இன்று வெளியாகும் ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ.. விலை, கிரே மார்க்கெட் விலை இதுதான்..

Posted by - August 2, 2024 0
இன்று Ola Electric Mobility Limited இன் பங்குகள் கிரே மார்க்கெட் ரூ.17 பிரீமியத்தில் கிடைக்கின்றன என்று சந்தை பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதன் ஐபிஓ விலை, மார்க்கெட்…

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?

Posted by - May 1, 2023 0
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு…

157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை – அதிர்ச்சியளித்த 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Posted by - May 29, 2023 0
குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில்…

‘பிரபலங்களுடன் தொடர்பு’ – கைதான ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்ததாக என்சிபி தகவல்

Posted by - March 9, 2024 0
புதுடெல்லி: சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB – என்சிபி) அதிகாரிகள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *