வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: உஷார் நிலையில் விமான நிலையங்கள்!

294 0

வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சீனாவில் கொரோனா BF.7 வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் அதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு, சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் இன்று ஒரு நாளில் புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3, 428 ஆக உயர்ந்துள்ளது. இதில் சீனாவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய நபரும் அடங்குவார். அவர், உருமாறிய BF7 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய, பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே பீகார் மாநிலம் கயா விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் மியான்மர் சேர்ந்த அவர்கள், ஹோட்டல் ஒன்றில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபோலவே கொல்கத்தா விமான நிலையம் வந்த வெளிநாட்டைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அதில் ஒருவர் துபாயைச் சேர்ந்தவர், மற்றொருவர் மலேசியாவைச் சேர்ந்தவர். இருவரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Post

கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

Posted by - July 22, 2023 0
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 7 ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு அழைப்பு

Posted by - December 7, 2023 0
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர்…

சிதைந்த உடல்கள்… ரத்த கறையில் தண்டவாளங்கள்… பதற வைக்கும் விபத்துக்களம்

Posted by - June 3, 2023 0
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி…

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - September 7, 2023 0
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை…

மற்றவர்களை விட நீங்கள் குளிரை அதிகமா உணர்கிறீர்களா..? ‘இந்த’ வைட்டமின் குறைபாடு இருக்கலாம்!

Posted by - December 16, 2024 0
உங்களைச் சுற்றியுள்ளவர்களை விட நீங்கள் குளிரால் நடுங்கினால், உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததே காரணம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *