1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக் செய்யுங்க… சூப்பரா இருக்கும்..

231 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் பலகாரங்களை செய்வோம். நீங்களும் உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டீர்களா? பொதுவாக ஸ்வீட் என்றதுமே பலரது நினைவிற்கு முதலில் வருவது மைசூர் பாக்காகவே இருக்கும். அதுவும் வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை சாப்பிடவே அனைவரும் விரும்புவோம்.

உங்கள் வீட்டில் உள்ளோர் மைசூர் பாக்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பலகாரம் செய்யும் போது, மைசூர் பாக்கையும் செய்யுங்கள். மைசூர் பாக் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதும்.

உங்களுக்கு வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் மைசூர் பாக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக்  செய்யுங்க... சூப்பரா இருக்கும்.. | Diwail Special Ghee Mysore Pak Recipe -  Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு – 1 கப்

* எண்ணெய் – 3/4 கப்

* நெய் – 3/4 கப்

* சர்க்கரை – 1 கப்

* தண்ணீர் 1/2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி லேசாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் பாதியை ஒரு பௌலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மீதமுள்ள பாதி எண்ணெய் நெய் கலவையை கடலை மாவில் ஊற்றி கட்டிகளின்றி நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு அகலமான வாணலியில் 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, அடுப்பில் வைத்து சர்க்கரையை கரைக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும், குறைவான தீயில் வைத்து, சர்க்கரை கம்பி பதத்திற்கு வரும் வரை சூடேற்ற வேண்டும்.

* சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* கடலை மாவானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் எடுத்து வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி விட வேண்டும்.

* கடலை மாவை வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மீண்டும் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய்யை தடவி, அதில் இந்த கடலை மாவை ஊற்றி பரப்பி, 1 மணிநேரம் குளிர வைக்க வேண்டும்.

* அதன் பின் கத்தியால் அதை துண்டுகளாக்கினால், சுவையான நெய் மைசூர் பாக் தயார்.

Related Post

நடுரோட்டில் சண்டை, போலீசில் சிக்க வைத்த பாக்யா.. இது தேவையா கோபி?

Posted by - August 4, 2023 0
பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கிலிஷ் கிளாசில் பாக்யாவுக்கு பழனிச்சாமி நேரில் ப்ரொபோஸ் செய்வதை…

6 மாசம் இயக்குனர் கூட அட்ஜஸ்ட்மென்ட்..பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா ஷாக்கிங் தகவல்

Posted by - November 3, 2023 0
லாவண்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் லாவண்யா. ஷாக்கிங் தகவல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய…

விவாகரத்திற்கு பிறகு புதிய காதலருடன் நடிகை எமி ஜாக்சன்- வெளியிட்ட மோசமான புகைப்படம்

Posted by - February 16, 2023 0
எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த ஹாலிவுட் நாயகி தான் எமி ஜாக்சன். அப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணைந்து…

இந்த சீரியலும் முடிகிறதா.. சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்

Posted by - April 27, 2024 0
டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த…

கலர்ஸ் தமிழ் சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

Posted by - December 13, 2022 0
பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பொழுதுபோக்கை மையமாக வைத்து பல டிவி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *