14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

316 0

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 5.30 மணி வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் |  Tamilnadu Weather-IMD likely rains 14 districts and pucudchery
இன்று காலை 4 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. தரமணி, ஆலந்தூரில் 14 செ.மீட்டர் மழையும், செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீட்டர் மழையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு தாம்பரம், ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, குன்றத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 73 ஆண்டுகளில் இந்த மழைப்பதிவு 2-வது அதிகபட்சமாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Post

“அரசியலில் குதிக்கும் முன்பே குளறுபடி…டென்ஷனில் தளபதி விஜய்..”

Posted by - October 28, 2023 0
தளபதி விஜய் சமீபமாகவே அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்…விரைவில் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது…அவரே ஹிண்ட்ஸ் கொடுத்ததும் இருந்தார்…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

Posted by - August 21, 2023 0
போரூர்: தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை…

கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகார்.. சாட்டை துரைமுருகனை விடுதலை செய்த நீதிபதி

Posted by - July 12, 2024 0
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

Posted by - April 18, 2024 0
தற்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில்…

சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

Posted by - December 13, 2023 0
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *