கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகார்.. சாட்டை துரைமுருகனை விடுதலை செய்த நீதிபதி

175 0

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனை, நீதிமன்ற காவலில் அனுப்ப நீதிபதி மறுத்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், சாட்டை துரைமுருகனை, திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மட்டுமன்றி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு செல்ல தேவையில்லை என கூறி, சாட்டை துரைமுருகனை விடுவித்தார். இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன் என சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Post

சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 20, 2022 0
weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என…

11 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வராதீங்க…

Posted by - April 12, 2023 0
குளிர்பானங்கள், மதுபானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ரசாயனம் மூலம் வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவை பழுக்கவைப்பது கண்டறியப்பட்டால், கடையின் உரிமம் ரத்து…

உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்…

Posted by - March 25, 2025 0
வாணியம்பாடி அருகே தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி, நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் வேகமாக சென்றதால், அதை பின் தொடர்ந்து சென்று பேருந்தில் ஏறிய வீடியோ…

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – அடுத்த 3 மணிநேரம் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 11, 2023 0
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன்…

அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஈபிஎஸ் – பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - March 28, 2023 0
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *