1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

229 0

சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் மிகவும் சவாலானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் என இதுவரை எதிர்கொண்டிருந்த தி.மு.க.விற்கு இந்த முறை மிகப்பெரிய தலைவலியாக அமைந்ததிருப்பவர் நடிகர் விஜய்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

இந்தாண்டு பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் தி.மு.க., பா.ஜ.க.வே தங்கள் எதிரி என்று அறிவித்தார். மேலும் தி.மு.க.வின் கூட்டணியை உடைக்க விஜய் பல வியூகங்களையும் வகுத்து வருகிறார். 2025ம் ஆண்டு முதலே தமிழக அரசியல் கூட்டணி கணக்கில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தி.மு.க.,விற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வும் ஒருபுறம் காய் நகர்த்தி வருகிறது. இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தி.மு.க. அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல நடவடிக்கைகளை எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை:

அதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் என்ற திட்டத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனாலும், முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் பலருக்கும் தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் அரசு மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழக அரசைப் பின்பற்றி கர்நாடகம், மகாராஷ்ட்ராவிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அடுத்தாண்டு முதல் மகளிர் உரிமைத் தொகையை அதிகரிப்பதுடன், இதுவரை விண்ணப்பித்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கையை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

கைகொடுக்குமா வியூகம்?

தி.மு.க. அரசு வகுத்துள்ள இந்த வியூகத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில், கடந்த சட்டமன்ற தேர்தலைப் போலவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தி.மு.க. நம்புகிறது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு பெரியளவில் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் நம்புகிறது. பொங்கலுக்கு பிறகு இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி இர்பான்.. நடவடிக்கைக்கு பயந்து எடுத்த முடிவு

Posted by - May 22, 2024 0
ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என ரிவியூ சொல்லி யூட்டியூபில் பாப்புலர் ஆனவர் இர்பான். அவர் சமீபத்தில் தொடங்கிய குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராகவும் வந்திருக்கிறார்.…

மீண்டும் மதன் ரவிச்சந்திரன்; ‘ஸ்டிங் மேளா’ வீடியோக்களால் பரபரப்பு!

Posted by - March 16, 2023 0
ஓராண்டுக்கும் மேலான இடைவெளியில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். இம்முறை ’ஸ்டிங் மேளா’ என்ற பெயரில் அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் பலரின் வயிற்றில் புளி…

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

Posted by - October 28, 2024 0
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது…

ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!

Posted by - January 16, 2025 0
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வைத்திலிங்கத்திற்கு சொந்தமான கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…

நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - May 29, 2025 0
சித்த மருத்துவர் 2 மணி நேரம் பேசிக்கொண்ட நேரத்தை இழுத்தடித்ததே நடிகர் ராஜேஷின் மரணத்திற்கு காரணம் என்று அவரது தம்பி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபலமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *