1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

226 0

சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தல் மிகவும் சவாலானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் என இதுவரை எதிர்கொண்டிருந்த தி.மு.க.விற்கு இந்த முறை மிகப்பெரிய தலைவலியாக அமைந்ததிருப்பவர் நடிகர் விஜய்.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:

இந்தாண்டு பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் தி.மு.க., பா.ஜ.க.வே தங்கள் எதிரி என்று அறிவித்தார். மேலும் தி.மு.க.வின் கூட்டணியை உடைக்க விஜய் பல வியூகங்களையும் வகுத்து வருகிறார். 2025ம் ஆண்டு முதலே தமிழக அரசியல் கூட்டணி கணக்கில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தி.மு.க.,விற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வும் ஒருபுறம் காய் நகர்த்தி வருகிறது. இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தி.மு.க. அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல நடவடிக்கைகளை எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை:

அதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் என்ற திட்டத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனாலும், முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் பலருக்கும் தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் அரசு மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழக அரசைப் பின்பற்றி கர்நாடகம், மகாராஷ்ட்ராவிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அடுத்தாண்டு முதல் மகளிர் உரிமைத் தொகையை அதிகரிப்பதுடன், இதுவரை விண்ணப்பித்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கையை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

கைகொடுக்குமா வியூகம்?

தி.மு.க. அரசு வகுத்துள்ள இந்த வியூகத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில், கடந்த சட்டமன்ற தேர்தலைப் போலவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தி.மு.க. நம்புகிறது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு பெரியளவில் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் நம்புகிறது. பொங்கலுக்கு பிறகு இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…!

Posted by - February 13, 2024 0
இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…! மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை…

சுழன்று அடித்த மாண்டஸ் புயல்.. வேரோடு சாய்ந்த 48 மரங்கள்

Posted by - December 10, 2022 0
Mandous cyclone : நேற்று மாலை 7 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணி வரை 48 மரங்கள் கீழே விழுந்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.மாண்டோஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை…

ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 1, 2023 0
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக உள்ளார் K.S.தென்னரசு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால்…

அட்சய திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு!

Posted by - May 10, 2024 0
சித்திரை மாதத்தின் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை மதியம்…

“மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி” – ஆர்.எஸ். பாரதி தாக்கு

Posted by - December 15, 2024 0
ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *