ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!

190 0

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வைத்திலிங்கத்திற்கு சொந்தமான கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது. வைத்திலிங்கத்திற்குச் சொந்தமான 2 அசையா சொத்துகளை முடக்கியதாக எக்ஸ் தளத்தில் அமலாக்கத்துறை பதிவிட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ED ஸ்கெட்ச்சில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்:

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் வைத்திலிங்கம். தற்போது, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு அபார்ட்மெண்ட் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டி தருவதற்கு திட்ட அனுமதி வழங்க வைத்திலிங்கம், அமைச்சராக இருந்தபோது, 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்படுகிறது.

கலக்கத்தில் ஓபிஎஸ்:

லஞ்சமாக பெற்ற பணத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றது போல அவர் கணக்கு காட்டியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த நிலையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வைத்திலிங்கத்திற்கு சொந்தமான கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது. 2 அசையா சொத்துகளை முடக்கியதாக எக்ஸ் தளத்தில் அமலாக்கத்துறை பதிவிட்டுள்ளது.

Related Post

பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி – காதலன் உயிரிழப்பு..!!

Posted by - May 15, 2024 0
மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாய்…!

Posted by - September 21, 2023 0
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்நர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 9-ந்தேதி திடீரென அவரது…

குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் அதிமுகவினர் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

Posted by - October 17, 2024 0
நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை என அமைச்சர் சேகர்…

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்

Posted by - June 3, 2025 0
கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கன்னட திரைப்பட சங்கத்திற்கு கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் தக்…

அனைத்து வசதிகளும் தயார்… மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மேயர் கூறியது எதற்காக?

Posted by - May 5, 2025 0
வரும் 7ம் தேதி காலை 5.50 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் தேர் நிலையை வந்தடையும். தஞ்சை மேலவீதியில் இருந்து புறப்படும் தேர் வடக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *