2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

144 0

 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும் சேலையும் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கேற்ப, இயற்கைக்கும், சூரியனுக்கும், உழவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களின் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாவாகும். இது தை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் ஆகும். இந்த பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரித்து, புதிய தொடக்கத்தை வரவேற்கும் நாளாக அமைந்துள்ளது. அடுத்ததாக தைப்பொங்கல் நாளில் புது அரிசியில் இனிப்பு பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து வழிபடுவர். வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டாடுவார்கள். அடுத்தாக மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கலும் கொணாடாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு

இதனையடுத்து தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு வழங்கப்பட்டது.கடந்த 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. எனவே இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.5000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியானது.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிகைக விடுத்திருந்தனர். ஆனால் தமிழக அரசு பொங்கல் ரொக்கப்பணம் தொடர்பாக எந்தவித முடிவையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் ரொக்கப்பணம் வழங்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது. ஆயிரம் ரூபாயா.? 3 ஆயிரம் ரூபாயா என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தேர்தல் தினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பச்சரிசி,சக்கரை ஒதுக்கீடு

இந்த நிலையில் பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டி, 1 கோடியே 77 லட்சத்து 64ஆயிரம் சேலை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரொக்கம் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Post

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

Posted by - March 20, 2026 0
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு…

விஜய் சொன்ன முக்கிய தகவல்..

Posted by - February 2, 2026 0
தவெக 3ஆம் ஆண்டையொட்டி விஜய் கூறுகையில், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம்…

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - December 27, 2025 0
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம…

🔴LIVE | TN Budget 2026 | தொடங்கியது இடைக்கால பட்ஜெட் தொடக்கம் | MKStalin | TN Assembly

Posted by - February 17, 2026 0
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள, நிதி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு…

காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

Posted by - April 7, 2026 0
சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *