2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில் பறந்த அந்த ஆர்டர்

247 0

சென்னை:

கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டை சூழ்ந்த வெள்ளத்தால் வாங்கி வைத்த பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன. அது போல் சிறு சிறு பெட்டிக் கடைகளில் கூட மளிகை பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன.

வீட்டில் மின் சாதன பொருட்கள் நீரில் மூழ்கி, காயலான் கடைக்குகூட போட முடியாத சூழல் எழுந்துள்ளது. தற்போது இந்த அளவுக்கு மழை பெய்யும் என மக்கள் யாரும் நினைக்கவில்லை, அதுதான் இத்தனை பாதிப்புக்கு காரணம்.2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில்  பறந்த அந்த ஆர்டர் | Chennai Weather explains about what happened in  Chembarambakkam lake ...

இந்த மழையை 2015 பெருவெள்ளத்துடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். தற்போது வந்த புயலே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வடகிழக்கு பருவமழையே இன்னும் முடியாமல் இருக்கும் போது இனி அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது. மேலும் தற்போது கீழ் தளத்தில் குடியிருக்கக் கூட ஆட்கள் வராமல் வீட்டு உரிமையாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். மற்ற தளங்களுக்கு எல்லாம் போட்டா போட்டி நிலவுகிறது. அது போல் வீட்டை வாங்கும் போதும் கூட மேல் தளங்களையே மக்கள் விரும்புகிறார்களே தவிர கீழ் தளத்தை அல்ல. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம் குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் உள்ளன.

இதுகுறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் அதீத மழை பெய்தது. ஏற்கெனவே அந்த ஏரியில் நவம்பப் 30ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து மழை பெய்து வந்தது. அப்படி பார்த்தால் 36 முதல் 48 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை அதிகரித்துள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என 2015 டிசம்பர் 1 ஆம் வெளியான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு மிகவும் தாமதம். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் 2.12.2015 ஆம் தேதி அதிகாலை தண்ணீரின் அளவு அபாய அளவை தாண்டியது. ஏற்கெனவே அந்த ஏரியில் 2016ஆம் ஆண்டு கோடை காலத்தையொட்டி 85 சதவீதம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பெரு மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திறந்துவிடும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டார்கள். இதனால் ஏரியில் நீர் பாயும் திசையில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சூழல் குறித்து பலருக்கு தெரியாது. இதனால் ஏரி திறப்பு விவகாரத்தை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. மேக வெடிப்பு போன்ற மழையால் தண்ணீரின் அளவுக்கு அபாய கட்டத்தை எட்டிவிட்டால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் 76 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு இருந்தது. ஆனால் நகரில் பெய்த பெரு மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு 2015 ஐ விட தற்போதுதான் மக்களுக்கு அதிகரித்துள்ளது என சென்னை வெதர் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

jamesvasanthan

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

Posted by - April 27, 2026 0
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு…

நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

Posted by - March 18, 2023 0
1/ 5 தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2/ 5 நேற்று தங்கம் விலை…
Generated Image November 14 2025 6 19PM

மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்களுக்கு வரப்போகுது குட்நியூஸ்- எப்போ தெரியுமா.?

Posted by - November 14, 2025 0
அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பழையை ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முக்கிய முடிவு வெளியாகவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான…

தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை- பயணிகள் அவதி

Posted by - January 9, 2024 0
புதுச்சேரி: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில்…

விஜய் மீது செருப்பு தூக்கி வீசிய நபர்.. செருப்பால் அடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை

Posted by - December 29, 2023 0
அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார். இவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *