சென்னையில் பள்ளி மாணவிகளை லாட்ஜுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த பெண் புரோக்கர் குடும்பத்தினரோடு சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை, வளசரவாக்கம் வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டில் ரெய்டு நடத்தினர். அப்போது பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது கண்டு, போலீசார் அதிர்ந்து போனார்கள். இதனை அடுத்து பெண் புரோக்கர் நதியா, அவரது உறவினர்கள் மற்றும் 17, 18 வயதே ஆன 2 இளம்பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் படுபயங்கர சம்பவம் அம்பலமாகியுள்ளது.பெண் புரோக்கரான நதியா, 12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் அவரது பள்ளி தோழிகளுக்கு வலைவீசியுள்ளார். பள்ளி மாணவிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். உள்ளூர் புரோக்கர்கள் மூலம் தன்னிடம் சிக்கிய சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமாகியுள்ளது.சென்னை மாநகரில் பாலியல் இச்சை கொண்ட வயதான நபர்கள் பலர் சிறுமிகள் வேண்டும் என்று நதியாவிடம் கேட்டுள்ளனர். அது போன்ற நேரங்களில் 17 வயதே ஆன மாணவிகளை நதியா அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார். இதற்காக ஒருநாள் இரவுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வசூலித்து இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் ஏராளமான மாணவிகளின் வாழ்க்கையோடு நதியா விளையாடி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், கைதான புரோக்கர்களிடமிருந்து 7 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் நதியா உள்பட 7 பேரை சிறையில் அடைத்துள்ள போலீசார், மீட்கப்பட்ட 2 இளம்பெண்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றால் எங்கு செல்கிறார்கள்? என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பள்ளி மாணவிகள் மூளை சலவை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.