பள்ளி மாணவிகளை வைத்து தொழில்… மகள் மூலம் வலை விரிப்பு.. பெண் புரோக்கரின் திடுக்கிடும் பின்னணி

184 0

சென்னையில் பள்ளி மாணவிகளை லாட்ஜுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த பெண் புரோக்கர் குடும்பத்தினரோடு சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை, வளசரவாக்கம்  வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டில் ரெய்டு நடத்தினர். அப்போது பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது கண்டு, போலீசார் அதிர்ந்து போனார்கள். இதனை அடுத்து பெண் புரோக்கர் நதியா, அவரது உறவினர்கள் மற்றும் 17, 18 வயதே ஆன 2 இளம்பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் படுபயங்கர சம்பவம் அம்பலமாகியுள்ளது.பெண் புரோக்கரான நதியா, 12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் அவரது பள்ளி தோழிகளுக்கு வலைவீசியுள்ளார். பள்ளி மாணவிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். உள்ளூர் புரோக்கர்கள் மூலம் தன்னிடம் சிக்கிய சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமாகியுள்ளது.சென்னை மாநகரில் பாலியல் இச்சை கொண்ட வயதான நபர்கள் பலர் சிறுமிகள் வேண்டும் என்று நதியாவிடம் கேட்டுள்ளனர். அது போன்ற நேரங்களில் 17 வயதே ஆன மாணவிகளை நதியா அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார். இதற்காக ஒருநாள் இரவுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வசூலித்து இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் ஏராளமான மாணவிகளின் வாழ்க்கையோடு நதியா விளையாடி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், கைதான புரோக்கர்களிடமிருந்து 7 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் நதியா உள்பட 7 பேரை சிறையில் அடைத்துள்ள போலீசார், மீட்கப்பட்ட 2 இளம்பெண்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றால் எங்கு செல்கிறார்கள்? என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பள்ளி மாணவிகள் மூளை சலவை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

Posted by - August 21, 2023 0
போரூர்: தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை…

கண்பார்வையை அதிகரிக்க கேரட் மட்டுமில்லை இந்த எளிய பொருட்களையும் சாப்பிடலாமாம்… ட்ரை பண்ணுங்க…!

Posted by - October 17, 2023 0
நம் உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்று கண்கள். நம் கண்களால் தான் நாம் இந்த உலகை ரசிக்க முடிகிறது. ஆனால், மோசமான வாழ்க்கை முறையால் கண்…

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - December 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் – இப்படியா பண்றது?

Posted by - May 13, 2025 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இரு தலைவர்களுக்கிடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. ஸ்டாலின், இபிஎஸ்-ன் பதிவுகள் என்ன.? பார்க்கலாம்……

ஜிப்மரில் கணைய புற்று நோய்க்கு ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை- சிறு துவாரமிட்டு 10 மணி நேரம் செய்து சாதனை

Posted by - August 12, 2023 0
புதுச்சேரி: புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *