“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

305 0

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த போது மாப்பிள்ளை சம்பா அரிசி குறித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு பேசியது, சட்டமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஏரினும் நன்றால் எருவிடுதல் என்ற திருக்குறளுடன் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் தாக்கலை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். 3 ஆவது முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்தார். அவருக்கு உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முனைப்பாடியாரின் இன்சொல் விளைநிலமா என்ற அறநெறிச்சாரத்தை கூறி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது உரையை தொடங்கினார். தனது உரையில் மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம் என்றும் தங்க சம்பா சாப்பிட்டால் தங்கம் மாதிரி ஜொலிக்கலாம் என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மெல்ல திரும்பி அமைச்சரை பார்த்து, லேசாக புன்னகைத்தார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு அப்போ எல்லோருக்கும் கொடுங்கள். சாப்பிட தயாராக இருக்கிறோம்” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மலர் கொத்துக்கு பதிலாக சிறுதானிய பயிர்களின் கொத்தை பரிசாக அளித்தார்.

வேளாண்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சருக்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் பரிசாக வழங்கினார்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Post

ரூ.1 கோடி நஷ்டஈடு தரணும்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை!

Posted by - December 9, 2023 0
15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு…

கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்: 10-ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Posted by - February 16, 2023 0
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பாதிப்படைந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்சலாக ஐகோர்ட்டை நாடினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும் ஒப்பிட்டு…

சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் வெள்ளத்தில் மூழ்க என்ன காரணம்? ஞாயிறு இரவு நடந்தது என்ன?

Posted by - December 8, 2023 0
சென்னை: சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் கீழ்கட்டளை பகுதிகள் வெள்ளத்தில் சிக்க என்ன காரணம் , ஞாயிறு இரவு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.. ஞாயிறு அன்று காலை…

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அவங்க உடலில் என்ன நடக்குமாம் தெரியுமா?

Posted by - December 26, 2023 0
பிஸ்தா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். கூடுதலாக, எந்தவொரு ஆரோக்கியமான உணவுக்கும் இது ஒரு நல்ல கூடுதலாக இருக்கும். உங்கள் இரத்தத்தில் உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *