செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…

199 0

Independence Day | நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி தொடர்ந்து 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிரதமர், முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டை வண்ண விளக்கொளியில் மின்னியது. இதேபோன்று, பழைய மற்றும் புதிய நாடாளுமன்ற வளாகங்கள், குதுப்மினார் உள்ளிட்ட வரலாற்று தொடர்புடைய இடங்களும் மூவர்ண விளக்கொளியில் அழகூட்டப்பட்டு கண்களுக்கு விருந்து படைத்தன.சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள இந்தியா கேட், குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் உலக பாரம்பரிய சின்னமான ஹூமாயூன் சமாதி உள்ளிட்ட பகுதிகள் மூவர்ண விளக்கொளியில் ஜொலித்தன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் மாநகராட்சி கட்டடங்களும் மூவர்ண விளக்கொளியில் கண்களுக்கு விருந்து படைத்தன.பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் எல்லை பாதுகாப்பு படை அலுவலகமும் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது. மத்திய பிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலகம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது

Related Post

”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

Posted by - December 11, 2024 0
#kadavulae #Ajithae : என்னை ”கடவுளே அஜித்தே” என கூப்பிடுவது ,என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார் கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க என்றும் யாரையும்…

இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்… புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ…

Posted by - January 23, 2025 0
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன. செல்போன்…

அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்!

Posted by - April 20, 2024 0
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: மேலும் 3 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை- சாலைகளில் மக்கள் போராட்டம்

Posted by - July 22, 2023 0
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம்…

கூகுள் தேடல் 2024:இதையெல்லாமா கூகுளில் தேடுவீங்க…

Posted by - December 11, 2024 0
இந்தியர்கள் மொத்தமாக கூகுளில் அதிகம் தேடியது என்ன? இந்தியன் பிரீமியர் லீக் T20 உலகக் கோப்பை பாரதிய ஜனதா கட்சி தேர்தல் முடிவுகள் 2024 ஒலிம்பிக்ஸ் 2024…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *