ஆடி கடைசி வெள்ளி… மறந்துடாதீங்க! கண்டிப்பாக இதை செய்யுங்கள்…

182 0

ஆடி மாதத்தில் சிறப்புக்குரிய நாட்கள் எத்தனை வந்தாலும் ஆடி வெள்ளிக்கு மட்டும் ஏன் தனி சிறப்புகள் உள்ளன.

பல கொண்டாட்டங்களுக்கு பிறகு தற்போது ஆடி மாதத்தின் இறுதி நாட்களில் இருக்கிறோம்.

அந்தவகையில், ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கடைசி வெள்ளி கிழமையில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்.

சுமங்கலி பூஜை

ஆடி மாதத்தில் சுமங்கலி பூஜை செய்வது அம்பாளின் மனதை குளிர்விக்கும். இதனால் இல்லம் சுபிட்சமாக மாறும் என்பது ஐதீகம்.சுமங்கலி பூஜைக்கென்றே பிரத்தியேகமாக விருந்து தயார் செய்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்து தாம்பூலம் கொடுப்பது வழக்கம்.இதை செய்யமுடியவில்லை எனில் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, இரண்டு வாழைப்பழம், மஞ்சள், குங்குமம் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைத்து, தாம்பூலம் கொடுத்து ஆசி பெறலாம்.

வீட்டுக்கு யாரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்க முடியாதவர்கள், அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று, அர்ச்சனை செய்து, அம்மனுக்கு புடவை சாற்றலாம்.

குத்து விளக்கு பூஜை

பெரும்பாலான அம்மன் கோவில்களில், ஆடி கடைசி வெள்ளியன்று நாள் முழுவதும் பூஜைகள் நடைபெறும்.அதில், குத்து விளக்கு பூஜை நடைபெறும் அம்பாள் ஆலயத்தில் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

ஆடி வெள்ளி விரதம்

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அம்மனின் அனுக்கிரகம் கட்டாயமாக கிடைக்கும்.

விரதமிருப்பவர்கள், காலையில் அம்மனுக்கு விளக்கேற்றி, தீபாராதனை செய்து இனிப்பு நைவேத்யம் செய்ய வேண்டும்.அதன் பிறகு மாலையிலும் அதேபோல விளக்கேற்றி, பின்னர் விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.

சொல்லவேண்டிய மந்திரம்

வீடு சுபிட்சமாக, தடைகள், நோய்கள் நீங்க, லலிதா சஹஸ்ரநாமம் மந்திரம் செய்யலாம்.

அனைத்து விதமான தோஷங்களும், கண் திருஷ்டி உள்ளிட்ட எதிர்மறையான ஆற்றல் விலக, அபிராமி அந்தாதி பாடல்களை மந்திரம் செய்யலாம்.

கடன் மற்றும் வறுமை நீங்கி, செல்வம் தழைத்து வளர, கனக தாரா ஸ்தோத்திரத்தை மந்திரம் செய்யலாம்.

 

Related Post

செல்போன் செயலி மூலம் கலர் பிரிண்ட் எடுத்து ரூ.20 லட்சம் கடனை அடைக்க கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர்கள்

Posted by - August 14, 2023 0
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த…

முடிந்தது 1st Sitting பேச்சுவார்த்தை மீண்டும் இணையும் இலை!…

Posted by - November 9, 2023 0
தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளரின் YOUTUBE ஊடகம் ஒன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இரண்டு…

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

கழிப்பறை இருக்கையில் இருந்து ‘இந்த’ ஆபத்தான நோய்களால் நீங்க பாதிக்கப்படலாம்… அப்ப என்ன செய்யணும் தெரியுமா?

Posted by - December 28, 2023 0
கழிப்பறை இருக்கைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நீங்கள் ஆபத்தான தொற்றுநோய்களை பெற வாய்ப்புள்ளது. கழிப்பறை இருக்கையிலிருந்து நீங்கள் பெறக்கூடிய சில நோய்த்தொற்றுகள் பற்றி…

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு

Posted by - November 18, 2023 0
சென்னை: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *