அறிவித்தபடி நடைபெறுமா மாநாடு? #TVK -வினருக்கு போலீசார் மீண்டும் நோட்டீஸ்!

151 0

தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் வழங்கினர்.

 

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27ம்தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 50 அடி அகலம், 200 அடி நீளத்திற்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடலில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தவெக மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்புக் கோரி, கட்சி சார்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் 33 நிபந்தனைகளை விதித்த காவல் துறை, அவற்றில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. இதனால், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கூடுதல் விளக்கங்களைக் கேட்டு, விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார் கடந்த 14ம் தேதி நோட்டீஸ் வழங்கினார்.

இதை புஸ்ஸி ஆனந்த் சார்பில், விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு வந்த தவெக தொகுதிப் பொறுப்பாளர் சக்திவேல் பெற்றுக் கொண்டார். அந்த நோட்டீஸில் காவல் துறை சார்பில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் வருமாறு:

“தவெக மாநில மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து 1.50 லட்சம் பேர் வந்து பங்கேற்பர் என்றும், இதற்காக 50,000 நாற்காலிகள் போடப்படும் எனவும் தெரிவித்துள்ளீர்கள். மாநாட்டுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வர உள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த விழுப்புரம் – சென்னை சாலையில் 28 ஏக்கர் நிலமும், கூடுதலாக 15 ஏக்கர் நிலமும், வடதமிழ்நாட்டிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்த 40 ஏக்கர் நிலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.

எனவே, இதற்கான திட்டத்தையும், வரைபடத்தையும் காவல் துறை வசம் வழங்க வேண்டும். மாநாடு நடைபெறும் தினம் வடகிழக்கு பருவமழைக் காலமாக இருப்பதால், வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. அதனால் வாகனங்களை சிரமமின்றி நிறுத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகிற வாகனங்களான கார், பேருந்து, வேன் ஆகியவற்றின் விவரங்களை காவல் துறைக்கு வழங்க வேண்டும்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

Related Post

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - January 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

போதைப் பழக்கமே குற்றங்களை எளிமையாக்குகிறது – இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை

Posted by - March 9, 2024 0
நாட்டில் நடக்கும் பாதி குற்றங்களுக்கு காரணம் போதை பழக்கம் தான் என்றும் குற்றங்களை எளிமையாக செய்ய போதை ஒரு ஆயுதமாக இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஊர்வசி…

கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் – அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

Posted by - April 23, 2024 0
தமிழகத்தின் வெவேறு இடங்களில் போதை ஆசாமிகளால் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?

Posted by - May 22, 2025 0
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்…

வெறுமனே இந்த “மஞ்சள்” கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்.. ஆயுசும் கூடும்.. அருமை

Posted by - November 18, 2023 0
சென்னை: உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் தரக்கூடியவை.. கலர் கலர் காய்கறிகளே, உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மஞ்சள் கலரையும் தவிர்த்து விட முடியாது. நீலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *