“இங்கு பாம்புதான் அரசியல்… ஆனால் நான் பயப்படமாட்டேன்..” – தவெக மாநாட்டில் விஜய் சொன்ன காரணம்!

159 0

அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட்.

“இங்கு பாம்பு தான் அரசியல் என்றும் அதை கையில் பிடித்து விளையாடும் குழந்தை நான்” என்றும் தவெக மாநாட்டில் விஜய் உரையாற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் எந்தவொரு குறிப்பு பேப்பர் இல்லாமல் எளிய நடையில் பேசியது கவனம் பெற்றுள்ளது.

வழக்கமாக அரசியல்வாதிகள் மேடையில் இருப்போரை வரவேற்று பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் விஜய் இதனை தவிர்த்து, நேரடியாக மக்கள் பேசும் யதார்த்த மொழியில் பேசியது வரவேற்பை பெற்றது. முதன்முறையாக அரசியல் மேடையில் மைக்கை பிடித்த விஜய் பேசியதாவது:-

ஒரு குழந்தை முதன்முதலாக அம்மான்னு சொல்றப்ப அம்மாவுக்கு ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க… அந்த சிலிர்ப்பு எப்படி இருந்துச்சுன்னு அந்த அம்மா கிட்ட கேட்டா அவங்களால தெளிவாக விளக்கி சொல்ல முடியும். ஆனா அந்த உணர்வு எப்படி இருந்துச்சுன்னு குழந்தை கிட்ட கேட்டா அந்த குழந்தைக்கு எப்படி சொல்ல தெரியும்?

குழந்தைகிட்ட எதை கேட்டாலும் பால் வாசம் மாறாத வாயோட வெள்ளந்தியாக சிரிக்க மட்டும் தானே தெரியும். அந்த குழந்தை உணர்ந்த சிலிர்ப்பை வார்த்தைகளால் சொல்ல தெரியாது. அப்படி ஒரு உணர்வோட தான் இப்ப நான் உங்க முன்னாடி நிற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அம்மா கிட்ட கூட தன்னோட உணர்வை சொல்ல முடியாத குழந்தைக்கு முன்னாடி ஒரு பாம்பு வந்து படம் எடுக்குதுன்னு வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்? யார் முன்னாடி பாம்பு வந்து நின்னாலும் அலறி அடிச்சு ஓடுவாங்க….‘பாம்பை கண்டால் படையே நடுங்கும்’ என்று ஒரு பழமொழி இருக்கு. ஆனா அந்த குழந்தை என்ன செய்யும் தெரியுமா? தன்னோட அம்மாவை பார்த்து சிரிச்ச அதே சிரிப்போட, கொஞ்சம் கூட அலட்டிக்காம அந்த பாம்பையும் சிரிச்சுக்கிட்டே தன்னுடைய கையில புடிச்சு விளையாட ஆரம்பிக்கும். அப்போ அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இருக்காதா என்ற கேள்வியும் வரும். பாச உணர்வையே சொல்லத் தெரியாத அந்த குழந்தைக்கு பயம்னா மட்டும் எப்படி சொல்ல தெரியும்? இங்கு அந்த பாம்புதான் அரசியல். அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட்” என்று விஜய் பேசினார்.மேலும் அரசியல் ஒரு போர்க்களத்தில் தொண்டர்கள் கவனமாக களமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.முன்னதாக மாநாடு மேடைக்கு வந்த விஜய் மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களைச் சந்தித்தார். பிறகு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி கொடியை ஏற்றினார். பிறகு தவெகவின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.தவெகவின் கொள்கையும் செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி கட்சியின் கொள்கையை பேராசியர் சம்பத்குமார் அறிவித்தார்.

Related Post

நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியர் உயிரோடு எரித்து கொலை- கணவர் போலீசில் சரண்

Posted by - May 5, 2023 0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…!

Posted by - February 13, 2024 0
இன்று மாத பிறப்பு.. மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்…! மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இம் மாதத்தை…

கோகுல் ராஜ் கொலை வழக்கில் மீண்டும் பிறழ்சாட்சி சொன்ன சுவாதி.. கடைசி வாய்ப்பு கொடுத்த நீதிபதி

Posted by - November 26, 2022 0
மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? – நீதிபதி கேள்வி கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று ஆஜரான…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *