பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் கடை வைத்து நடத்தி வந்தவர் லோகேஸ்வரி. இவர், அவசர தேவைக்காக பாண்டி என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் தனது பெயரில் உள்ள கடையை ஆறுமுகம் என்பவருக்கு உள்வாடகைக்கு விட்டு, அதற்குரிய வாடகை தொகையை கடன் வாங்கிய பாண்டியிடம் செலுத்துமாறு கூறியுள்ளார். அப்படி உள்வாடகை எடுத்த லோகேஸ்வரியின் கடையில் ஆறுமுகம் பலகார கடை வைத்துள்ளார்.அதேபோல், மாதம் வாடகை தொகையை பாண்டியிடம் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதுதான் லோகேஸ்வரி வாங்கிய கடன் தொகையின் முழு அசலை கட்ட சொல்லி பாண்டிக்கு ஆறுமுகம் அழுத்தம் கொடுத்துள்ளார்.
தான் ஏன் கடனை அடைக்க வேண்டும். தன்னுடைய கடை ஓனர் வாங்கிய கடனுக்கு அவரையே அணுகும் என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி, தனது உறவினரான திருமங்கலம் 1வது வார்டு கவுன்சிலர் காசி பாண்டியின் உதவியை நாடியுள்ளார்.
உடனே கவுன்சிலர் காசி பாண்டி, ஆறுமுகத்தின் கடைக்கு சென்று பணம் கேட்டுள்ளார். “நகராட்சி கட்டிடத்தில் கடை வைத்து நடத்துகிறாய் உடனே கடையை காலி செய்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் பலகார தட்டுகளை தூக்கி வீசி எறிந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.உடனே அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து திமுக கவுன்சிலர் பாண்டியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அப்பாவி நபரின் பலகார கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் மதுரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.