அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.
அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தன் பக்கம் இருப்பதால் சிலருக்கு வயிறு எரிவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பண்பாடு இன்றி பேசும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிப்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் நம் பக்கம், மாற்று முகாம் கலக்கம் என்ற தலைப்பில், கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், “நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபடக் கூடாது என்ற அக்கறை அதிகாரிகள் வரை இருப்பதால், மக்களின் தேவை அறிந்து நிறைவேற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.
பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகத்தை முன்பை விடச் சிறப்பாகத் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பண்பாடு இன்றி, அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப்பயணத்திலும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதைப் பார்த்து சிலர் வயிறு எரிவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.