“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

202 0

அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தன் பக்கம் இருப்பதால் சிலருக்கு வயிறு எரிவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பண்பாடு இன்றி பேசும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிப்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் நம் பக்கம், மாற்று முகாம் கலக்கம் என்ற தலைப்பில், கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், “நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபடக் கூடாது என்ற அக்கறை அதிகாரிகள் வரை இருப்பதால், மக்களின் தேவை அறிந்து நிறைவேற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.

பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகத்தை முன்பை விடச் சிறப்பாகத் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பண்பாடு இன்றி, அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவருடன் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப்பயணத்திலும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதைப் பார்த்து சிலர் வயிறு எரிவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Post

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்றனர்

Posted by - December 6, 2023 0
சென்னை: ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது.…

பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி…

Posted by - June 25, 2025 0
வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, கட்சியிலும், அரசிலும் பதவிகளை இழந்த பொன்முடி, மு.க. ஸ்டாலினை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் அவர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Posted by - November 23, 2022 0
பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி…

”கேஸ் வாங்குறதுலாம் துணிக்கடைல கட்டப்பை வாங்குற மாதிரி..” மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்!

Posted by - December 27, 2022 0
செம்ம வெறி ஆகிட்டேன். டிடிஎஃப் பிராண்ட் உருவாக்க போறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராதா? – டிடிஎஃப் வாசன் நம்மை விரட்டியே…

பெண்களுக்கான ஜாக்பாட் – ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி – யாருக்கு கிடைக்கும்?

Posted by - December 15, 2024 0
TAHDCO Loan Scheme: மகளிருக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் (Mahila Adhikarita Yojana) கீழ் கிடைக்கும், மத்திய அரசின் கடனுதவி திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். மகளிருக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *