அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

173 0

தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக தங்களது ஆட்சியைத் தக்க வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக-வை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற அதிமுக, பா.ஜ.க., தவெக ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

அடுத்தடுத்து கொலை:

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் சட்டம் ஒழுங்கும் திமுக-விற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. திருநெல்வேலியில் நேற்று காலை தொழுகை முடிந்து வீடு திரும்பிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் திருநெல்வேலி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஈரோட்டில் நெடுஞ்சாலையில் காரில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஜான் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிப்படுகொலை செய்துள்ளது.

பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் அடுத்தடுத்து 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கொலைகள் அரங்கேறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வியை எழுப்பி வருகின்றன.

திமுக ஆட்சியில் அதிரவைத்த கொலைகள்:

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் சிலர் அடுத்தடுத்து போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டதும், ஜெயக்குமார் கொலை வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும் அரசு மீது கடும் கண்டனங்களை குவித்தது.

பாலியல் வன்கொடுமை:

திருட்டு, கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் ஆகியவற்றுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயே மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரம், ஈசிஆர் சாலையில் பெண்களை திமுக கொடி கட்டிய காரில் இளைஞர்கள் துரத்திய விவகாரம் என அடுத்தடுத்து திமுக  அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், திமுகவிற்கு எதிராக தீவிர பரப்புரையை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கடினமான நடவடிக்கைகளை ஆளுங்கட்சி எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது.

Related Post

பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

Posted by - March 11, 2024 0
தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..   சொத்துக்குவிப்பு வழக்கில்…

பெண்களை சூப்பர்வுமனாக மாற்ற இந்த 5 சூப்பர் உணவுகளை அவங்க உணவில் அவசியம் சேர்த்துக்கணுமாம்…!

Posted by - December 22, 2023 0
பெண்கள் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் படிப்படியாக, அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள், இதன் காரணமாக,…

முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

Posted by - June 23, 2025 0
பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு,…

”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?

Posted by - May 12, 2025 0
வன்னிய இளைஞர் மாநாட்டில் பாமக நிறுவனம் ராமதாஸ், மகன் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல என, அதன்…

அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்

Posted by - April 6, 2023 0
சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *