அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

181 0

தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக தங்களது ஆட்சியைத் தக்க வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக-வை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற அதிமுக, பா.ஜ.க., தவெக ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

அடுத்தடுத்து கொலை:

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் சட்டம் ஒழுங்கும் திமுக-விற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. திருநெல்வேலியில் நேற்று காலை தொழுகை முடிந்து வீடு திரும்பிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் திருநெல்வேலி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஈரோட்டில் நெடுஞ்சாலையில் காரில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஜான் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிப்படுகொலை செய்துள்ளது.

பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் அடுத்தடுத்து 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கொலைகள் அரங்கேறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வியை எழுப்பி வருகின்றன.

திமுக ஆட்சியில் அதிரவைத்த கொலைகள்:

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் சிலர் அடுத்தடுத்து போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டதும், ஜெயக்குமார் கொலை வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும் அரசு மீது கடும் கண்டனங்களை குவித்தது.

பாலியல் வன்கொடுமை:

திருட்டு, கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் ஆகியவற்றுடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளேயே மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரம், ஈசிஆர் சாலையில் பெண்களை திமுக கொடி கட்டிய காரில் இளைஞர்கள் துரத்திய விவகாரம் என அடுத்தடுத்து திமுக  அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், திமுகவிற்கு எதிராக தீவிர பரப்புரையை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கடினமான நடவடிக்கைகளை ஆளுங்கட்சி எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது.

Related Post

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது

Posted by - December 31, 2024 0
தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இன்று உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் தனுஷ் இதில் இவர் இயக்கி வரும் 4வது திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நித்யா…

“எத்தகைய வெட்கக்கேடு?” – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

Posted by - March 20, 2026 0
தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பின்னணி தூத்துக்குடி மாவட்டம்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – சமாதானம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 28, 2024 0
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமாதானமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

Posted by - February 18, 2025 0
ஆசிரியர் பணி நியமனத்திற்கு இனி ”காவல்துறை சரிபார்ப்பு சான்று” கட்டாயமாக்கப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்…

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - January 21, 2023 0
தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *