இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!

119 0

தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார்.

சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை, அதிமுகவினர் சிறையிலிருந்து வெளியே வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என்றார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

அதிமுகவினர் பனங்காட்டு நரி

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து நேற்று மதுரை மாநகர் அதிமுக சார்பில் செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில் ” உங்கள் அப்பனையே பார்த்தவர்கள், கலைஞரின் அடக்குமுறையை எதிர்த்து போராடி 31 ஆண்டுகள் நல்லாட்சியை தமிழக மக்களுக்கு அளித்துள்ளோம், அதிமுகவினர் பனங்காட்டு நரி, யாருக்கும் அஞ்ச மாட்டோம்.

செல்லூர் ராஜூ கைது

தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார். அதிமுக ஆட்சியில் 24,000 போராட்டங்கள் நடந்துள்ளன.  அதிமுக ஆட்சியில் இருந்த சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கே போனார்கள்? அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்த நடிகர் சூர்யா எங்கே சென்றார்? திமுக ஆட்சிக்கு எப்போது வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி சொன்ன “சார்” என்பவர் யார்?, “சார்” எனும் நபரை காப்பற்ற திமுக அரசு கபட நாடகம் நடத்துகிறது” என பேசினார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றதை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து  அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகளின் மக்களை சந்திப்பது ஓட்டை கப்பலில் பயணம் செய்வது போல இருக்கும் என மதுரையில் செல்லூர் ராஜு விமர்சனம்

 செல்லூர் ராஜூ உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில்…,” “மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு அதிமுகவினர் அகிம்சை வழியில் போராடினோம், ஆனால் காவல்துறை எங்களை குற்றவாளிகளை போல கைது செய்தது. அதிமுகவின் எழுச்சியை கட்டுப்படுத்தும் விதமாக திமுக அரசு மாணவிக்கு நீதி கேட்ட அதிமுகவினரை கைது செய்திருக்கிறதுழ் திமுக அரசின் கைது நடவடிக்கைக்கு அதிமுக என்றும் பயப்படாது.

திமுக கூட்டணி கட்சிகள் அடிமைக்கும் அடிமையாக செயல்படுகிறது

தமிழக மக்களுக்கு உண்மையான விடியலை தருவதற்காக அதிமுக களப்பணிகளை செய்து வருகிறது.
பல்கலைக்கழக மாணவிக்காக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை தானே வருத்திக்கொண்டு போராடி உள்ளார். தன்னை வருத்திக் கொண்டு போராடிய அண்ணாமலையின் போராட்டம் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை திமுக கூட்டணி கட்சிகள் அடிமைக்கும் அடிமையாக செயல்படுகிறது. மாணவிக்காக சிபிஎம் கட்சியின் அறிக்கை தவிர திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் மக்களை சந்திப்பது ஓட்டை கப்பலில் பயணம் செய்வது போல இருக்கும்.

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மது விற்பனையில் 15 சதவீதம் கமிஷன் தொகை  கொடுக்க வேண்டும் என எழுதப்படாத சட்டம் உள்ளது. ஒரு கோடி மது விற்பனைக்கு 15 இலட்ச ரூபாய் கமிஷன் தொகை தர வேண்டும். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை, அதிமுகவினர் சிறையிலிருந்து வெளியே வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள்” என பேசினார்.

Related Post

ஆளுநர் பிரச்சினை ஓவர்! அடுத்து ’நீட்’தான்! திமுகவின் அடுத்த ப்ளான் ரெடி!

Posted by - April 9, 2025 0
நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…

பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

Posted by - August 7, 2023 0
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள்…

திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

Posted by - May 29, 2023 0
அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

காலை 10 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - August 24, 2023 0
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வருகிற 29-ந்தேதி வரை கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக…

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *