தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வருகிற 29-ந்தேதி வரை கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கிண்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில கனமழை பெய்தது. இன்று காலையும் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் காலை 7 மணி முதல் 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து, இன்று அதிகாலை 2 மணி வரையில், காஞ்சிபுரத்தில் (சத்யபாமா பல்கலைக்கழகம்) 70 மி.மீ., செங்கல்பட்டில் (மேற்கு தாம்பரம்) 93 மி.மீ., சென்னையில் (நுங்கம்பாக்ம்) 35 மி.மீ. மழையும் பெய்துள்ளது.