கருவாடு கடை…மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்…!

196 0

முதலில் கருவாடு கடை ஏன் என்றால், மீன் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவாக கருதப்படுகிறது, அதிலும் எந்த வித கெமிக்கல்களும், எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடலுக்கு நன் ஊட்டச்சத்தை தரும் உணவு வகைகளுள் மீன் குறிப்பிடத்தக்க உணவாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் கருவாடும் ஒரு ஆகச்சிறந்த உணவு வகைகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.பொதுவாக வீட்டில் மீன் குழம்பு என்றாலும், கருவாடு குழம்பு என்றாலும் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு குழம்பு வைக்க தேவை இல்லை, காரணம் சுட வைத்து சுட வைத்து மூன்று நாட்களுக்கு சாப்பிடலாம், அதிலும் கருவாடின் சுவை என்பது நாள் அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகும், சரி அந்த வகையில் கருவாடு கடை எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.
பொதுவாக கருவாடு என்பது உலர்த்தப்பட்ட மீன் அவ்வளவு தான், ஒரு உணவோ பண்டமோ மீனோ அதை நன்கு சூரிய ஒளியில் உலர்த்தி உப்பிட்டு பதப்படுத்திடும் போது அதில் பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவைகள் ஆக்கிரம்படாமல் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும், அப்படித் தான் கருவாடும், நீங்களாக தயாரிக்க போகிறீர்கள் என்றால் மீன்களை துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம்.

பின்னர் வெட்டி உலர்த்தி உப்பு போட்டு பதப்படுத்தி, மீன் மார்க்கெட்டுகள் அல்லது ஏதாவது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடையாகவோ அல்லது தள்ளு வண்டிகள் மூலமாகவோ விற்கலாம், 10 ரூபாய் பாக்கெட்டுகள் போட்டு மொத்த கடைகளுக்கும் கொடுக்கலாம், ஒரு சிறிய கடுவாடு கடை வைக்க குறைந்தபட்சம் ஒரு 30000 முதலீடு கையில் இருந்தால் போதும்,

கட்டா பாறை, தேங்காய் பாறை, மஞ்சபாறை, கடல் விரால், சீலா, தேடு, சுறா, பால் சுறா, சூரை, பெரும்செல்லா, வாளை, விளமீன் மற்றும் வாவல் போன்ற மீன்களை தனித்தனியாக வெட்டி பதப்படுத்தி கருவாடு செய்ய வேண்டும், மொத்தமாக குழப்பி துண்டு கருவாடு செய்தால் அதன் சுவை மாறி விடும், தொழில் நன்கு பிக் அப் ஆகும் பட்சத்தில் மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்.

முறையான விற்பனைக்கான ஆவணங்கள், உணவு விற்பனைக்கான லைசென்ஸ், ஏற்றுமதிக்கான ஆவணம், GST எல்லாம் பதிவு செய்து வைத்து இருந்தால் வெளிநாடுகளுக்கும் உங்கள் கருவாடுகளை ஏற்றுமதி செய்ய முடியும், நீங்கள் முதலில் சிறியதாக சந்தைப்படுத்திவிட்டு உங்களுக்கு வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஏற்றுமதி குறித்து யோசிக்கலாம்.

Related Post

படுக்கையில் கட்டியணைத்தபடி கொடிய விஷப்பாம்புகளுடன் பயமின்றி தூங்கும் சிறுமி

Posted by - September 4, 2023 0
புதுடெல்லி: பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில்…

ஜியோ உடன் இணைந்த டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.. என்னென்ன சலுகைகள் இருக்கு தெரியுமா.?

Posted by - February 14, 2025 0
முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த வருடமே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து இந்த இரண்டு…

”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Posted by - December 11, 2024 0
Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை என, மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிக்கடி பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் தொடர்பான அரசின் தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ”பாராசிட்டமால்…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *