கருவாடு கடை…மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்…!

194 0

முதலில் கருவாடு கடை ஏன் என்றால், மீன் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவாக கருதப்படுகிறது, அதிலும் எந்த வித கெமிக்கல்களும், எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடலுக்கு நன் ஊட்டச்சத்தை தரும் உணவு வகைகளுள் மீன் குறிப்பிடத்தக்க உணவாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் கருவாடும் ஒரு ஆகச்சிறந்த உணவு வகைகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.பொதுவாக வீட்டில் மீன் குழம்பு என்றாலும், கருவாடு குழம்பு என்றாலும் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு குழம்பு வைக்க தேவை இல்லை, காரணம் சுட வைத்து சுட வைத்து மூன்று நாட்களுக்கு சாப்பிடலாம், அதிலும் கருவாடின் சுவை என்பது நாள் அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகும், சரி அந்த வகையில் கருவாடு கடை எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.
பொதுவாக கருவாடு என்பது உலர்த்தப்பட்ட மீன் அவ்வளவு தான், ஒரு உணவோ பண்டமோ மீனோ அதை நன்கு சூரிய ஒளியில் உலர்த்தி உப்பிட்டு பதப்படுத்திடும் போது அதில் பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவைகள் ஆக்கிரம்படாமல் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும், அப்படித் தான் கருவாடும், நீங்களாக தயாரிக்க போகிறீர்கள் என்றால் மீன்களை துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம்.

பின்னர் வெட்டி உலர்த்தி உப்பு போட்டு பதப்படுத்தி, மீன் மார்க்கெட்டுகள் அல்லது ஏதாவது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடையாகவோ அல்லது தள்ளு வண்டிகள் மூலமாகவோ விற்கலாம், 10 ரூபாய் பாக்கெட்டுகள் போட்டு மொத்த கடைகளுக்கும் கொடுக்கலாம், ஒரு சிறிய கடுவாடு கடை வைக்க குறைந்தபட்சம் ஒரு 30000 முதலீடு கையில் இருந்தால் போதும்,

கட்டா பாறை, தேங்காய் பாறை, மஞ்சபாறை, கடல் விரால், சீலா, தேடு, சுறா, பால் சுறா, சூரை, பெரும்செல்லா, வாளை, விளமீன் மற்றும் வாவல் போன்ற மீன்களை தனித்தனியாக வெட்டி பதப்படுத்தி கருவாடு செய்ய வேண்டும், மொத்தமாக குழப்பி துண்டு கருவாடு செய்தால் அதன் சுவை மாறி விடும், தொழில் நன்கு பிக் அப் ஆகும் பட்சத்தில் மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்.

முறையான விற்பனைக்கான ஆவணங்கள், உணவு விற்பனைக்கான லைசென்ஸ், ஏற்றுமதிக்கான ஆவணம், GST எல்லாம் பதிவு செய்து வைத்து இருந்தால் வெளிநாடுகளுக்கும் உங்கள் கருவாடுகளை ஏற்றுமதி செய்ய முடியும், நீங்கள் முதலில் சிறியதாக சந்தைப்படுத்திவிட்டு உங்களுக்கு வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஏற்றுமதி குறித்து யோசிக்கலாம்.

Related Post

காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்

Posted by - February 20, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில்…

14 பேரில் யாரை திருமணம் செய்யலாம்?- விவாதத்தை ஏற்படுத்திய பட்டதாரி பெண்ணின் டுவிட்டர் பதிவு

Posted by - July 19, 2023 0
மேட்ரிமோனியின் தளங்கள் மூலம் திருமண வரன்களை தேடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 29 வயதான பி.காம் பட்டதாரி பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தி…

ஒரு மாநிலமே ஆன்லைன் மோசடியில் சிக்கிய பரிதாபம்; ஒரே ஆண்டில் ரூ.64 கோடி இழந்த மக்கள்

Posted by - January 5, 2025 0
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், ஆன்லைன் மோசடியில் சிக்கிய 64.2 கோடி ரூபாயை இழந்துள்ளனர். புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 64.2 கோடி ரூபாயை,…

வியாழக்கிழமை சாய்பாபா வரலாறு….

Posted by - September 11, 2025 0
ஆரம்ப வாழ்க்கை சாய்பாபாவின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தெளிவாக தெரியவில்லை. 1838-ல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது மதம், குடும்பம் பற்றிய விபரம் மர்மமாகவே…

டெல்லி கார் வெடிப்பு – அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் – ஷாக்கிங் அப்டேட்ஸ்

Posted by - November 11, 2025 0
Redfort Car Blast: டெல்லியில் நடந்த கார் வெடிப்பு அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. Redfort Car Blast: டெல்லியில் வெடித்த காரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *