ரூ.1.25 லட்சம் வரை அரசு கடன்… குறைந்த வட்டியில் – எப்படி வாங்குவது? யார் யாருக்கு கிடைக்கும்?

185 0

ஆண், பெண் இருவருக்கும் ரூ.1.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இதனை கடனை பெற விண்ணப்பிப்பது எப்படி, விதிமுறைகள் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

சுய உதவிக்குழு மூலம் பல்வேறு திட்டங்கள் செய்யப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த குழுக்கடன் திட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் வழங்கப்படுகிறது. மகளிரின் வளர்ச்சிக்கு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, அதேபோல், அரசுப் பள்ளியில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், பெண்கள் தொழில் ரீதியாகவும் வளர்ச்சி பெற பல ஆண்டுகளாக சுய உதவிக்குழுக்கள் மூலமும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களின் தொழில்களை விரிவுப்படுத்தவும், புதிதாக தொழில் தொடங்கவும் சுய உதவிக்குழுக்கள் சார்பில் கடன் பெறும் திட்டமும் உள்ளது.  அந்த வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக குழுக்கடனாக 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் திட்டம் உள்ளது.  இந்த சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 கடன் வழங்கப்படும்.  மேலும் இந்த குழு தொடங்க சில விதிமுறைகளும் உள்ளன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்களில் இந்த திட்டம் குறித்து விண்ணப்பிக்கலாம். மேலும் TABCEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.

Related Post

CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்…

Posted by - June 10, 2025 0
 முதலமைச்சர் மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். Seeman Slams CM Stalin: அரசு மருத்துவமனைகளில் தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க…

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - April 6, 2023 0
அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு…

சுழன்று அடித்த மாண்டஸ் புயல்.. வேரோடு சாய்ந்த 48 மரங்கள்

Posted by - December 10, 2022 0
Mandous cyclone : நேற்று மாலை 7 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணி வரை 48 மரங்கள் கீழே விழுந்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.மாண்டோஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை…

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000… ரேசன் அட்டை இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு

Posted by - March 1, 2024 0
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண…

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை

Posted by - January 13, 2024 0
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *