“பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள்”..ஆனால் இப்போ பாருங்க.!…இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!

112 0

அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என கூறியிருந்த நிலையில், இன்று அதிமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார், அண்ணாமலை

பாஜகவால் தோற்றோம் , பாஜக நோட்டா கட்சி என கூறியவர்கள் எல்லாம், தற்போது கூட்டணிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக அதிமுகவை விமர்சித்திருக்கிறார்.

அதிமுக-பாஜக கூட்டணி 

தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் , சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு , எங்களுக்கு ஒரே எதிரி திமுக என இபிஎஸ் பதிலளித்தார்.

இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பேசியதாவது, திமுக கட்சிதான் எங்களுக்கு ஒரே எதிரி.  திமுகவிற்கு எதிராக இருப்பவர்கள், எங்களுக்கு நண்பர்கள். அதிமுக தலைமையிலான ,எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை ஏற்றுக் கொள்ளும் அனைவரையும் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

அண்ணாமலை அதிமுக மீது தாக்குதல்:

மேலும், இரு தினங்களுக்கு முன்பு அண்ணமலை தெரிவிக்கையில், “ அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என தெரிவித்தார். இந்நிலையில், அதிமுக பாஜக செயல்பாடுகள், அதிமுக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திடீரென இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை காட்டமாக மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.

இன்று அண்ணாமலை பேசியதாவது , “ பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டார் கட்சி என்றும் மற்றும் பாஜகவால்தான் தோற்றோம் என்று கூறியவர்கள் , இன்று எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி கொண்டே இருக்கிறது.

அதிமுகவை சிறுமைப்படுத்தும் அண்ணாமலை:

இக்கட்டான் சூழ்நிலையில் வந்தவர் தினகரன். பாஜக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும்.

மேலும், இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் தலைமையில்தான் கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயக்குமார் தெரிவித்த நிலையில்,  பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுகவை சிறுமைப்படுத்தும் விதமாக , அண்ணாமலை  திடீரென பேச வேண்டிய சூழல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன, அதிமுக – பாஜக கூட்டணி முயற்சி எதிரான போக்கிற்கு சென்றுவிட்டதா என்றும் கேள்வியை எழுப்பியிருக்கிறது, அண்ணாமலையி பேச்சு.

அதிமுக எதிர்வினை:

இந்த தருணத்தில், அதிமுக கட்சியை மறைமுகமாக  , பாஜக கூட்டணிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பேசப்பட்டதாக கூறப்படும் நிலையில் , அதிமுக என்ன சொல்ல போகிறது என்று எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

மேலும், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அண்ணாமலைதான் தடையாக இருப்பதாக பாஜகவினரின் சிலர் கூறி வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுக சிறுமைப்படுத்திய பேசிய பேச்சானது, அதிமுக கட்சியினர் மட்டுமன்றி பாஜகவினர் சிலரிடையே கசப்பான போக்கையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Related Post

திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.!

Posted by - February 28, 2026 0
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக…

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - December 2, 2022 0
கோவையை தமிழக அரசு புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்…

புதுசேரியில் திமுக ஆட்சி : ’ஸ்டாலின் பேசியதில் தவறில்லை…’ – நாராயணசாமி கொடுத்த விளக்கம்!

Posted by - December 13, 2022 0
Puducherry News : புதுச்சேரியில் திமுக ஆட்சி என கட்சியினரை உற்சாகப்படுத்த தமிழகக. முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள்…

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ED? முடங்கும் SK-வின் பராசக்தி? தேர்தல் பரப்புரையாக வரும் “ஜனநாயகன்”

Posted by - May 19, 2025 0
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்திருக்கும் அமலாக்கத்துறை சோதனையால், விஜய்க்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்திருக்கும் அமலாக்கத்துறை…

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - December 27, 2025 0
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *