காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம் …

111 0

காதல்…

18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று தவறாக நினைத்து அவர்கள் வெகுதூரம் செல்கிறார்கள். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக 12 வயது முதல் 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியேறி திரு மணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது அவர்களுக்கு ஆபத்தாக முடிந்து விடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு குடும்பத்தில் சரியான ஆதரவு கிடைக்காதது காரணமாக உள்ளது.

படிக்கும் வயதில் காதல் மயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில்தான் வீட்டை விட்டு ஓடிப்போகும் எண்ணம் வேரூன்றத் தொடங்குகிறது.

சமூக ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களின் தாக்கத்தால் காதல் அவர்களுக்கு எதையும் விட பெரிதாக தெரிகிறது.

அந்த நேரத்தில் இளம்பெண்கள் தங்கள் காதலன் தான் தங்களுக்கு எல்லாமே என்ற மாயையில் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

தாங்கள் விரும்பும் இளைஞனை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயமும் தங்கள் குடும்பத்தினர் தங்களைப் பற்றி அறிந்தால் மீண்டும் அவரைச் சந்திக்க விடமாட்டார்கள் என்ற பயமும் அவர்களை மிகவும் விரக்தியடையச் செய்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் காதலனுடன் ஓடிய மாணவிகள் பலர் வாழ்க்கையை இழந்துள்ளனர். இதில் ஏராளமானோர் மீண்டும் தங்களுடைய பெற்றோரை நாடி வருகிறார்கள்.

இளமைப் பருவத்தில் குழந்தைகளின் மனதின் ஆழத்தை நாம் தொடர்ந்து ஆராய வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகள் எல்லா விஷயங்களையும் பற்றி தங்களிடம் வெளிப்படையாகப் பேச ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோரின் ஆதரவு இல்லாதபோதுதான் குழந்தைகள் அந்நியர்களுடன் நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

படிப்பில் கவனம் செலுத்தி தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு நல்ல வருமானம் மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்வதன் மூலம் அவர்கள் கடினமாக உழைத்து சாதிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளலாம். இந்த வகையான சிந்தனையை சிறுமிகளிடம் விதைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

Related Post

புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு: பாராளுமன்றத்தில் மசோதா அறிமுகம்?

Posted by - December 12, 2023 0
மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேறியது. என்றாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு,…

வானில் பறந்த மர்ம பொருள்…பறக்கும் தட்டில் ஏலியன்களா..? வைரலாகும் வீடியோ!

Posted by - December 10, 2022 0
ஹைதராபாத் அருகே உள்ள கிராமம் ஒன்றில் வானில் மர்ம பறக்கும் பொருள் கடந்து சென்றதை வீடியோ எடுத்த பொதுமக்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ…

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது: ஆய்வில் தகவல்

Posted by - June 10, 2023 0
பெங்களூரு : பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,…

டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Posted by - December 6, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “மகாபரிநிர்வான் திவாஸ் அன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *