காதலன்தான் எல்லாம் என்ற மாயையில் வாழ்வை இழக்கும் சிறுமிகள்- ஆண் நண்பர்கள் இல்லாததை அவமானமாக கருதும் அவலம் …

147 0

காதல்…

18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று தவறாக நினைத்து அவர்கள் வெகுதூரம் செல்கிறார்கள். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக 12 வயது முதல் 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியேறி திரு மணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது அவர்களுக்கு ஆபத்தாக முடிந்து விடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு குடும்பத்தில் சரியான ஆதரவு கிடைக்காதது காரணமாக உள்ளது.

படிக்கும் வயதில் காதல் மயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில்தான் வீட்டை விட்டு ஓடிப்போகும் எண்ணம் வேரூன்றத் தொடங்குகிறது.

சமூக ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களின் தாக்கத்தால் காதல் அவர்களுக்கு எதையும் விட பெரிதாக தெரிகிறது.

அந்த நேரத்தில் இளம்பெண்கள் தங்கள் காதலன் தான் தங்களுக்கு எல்லாமே என்ற மாயையில் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

தாங்கள் விரும்பும் இளைஞனை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயமும் தங்கள் குடும்பத்தினர் தங்களைப் பற்றி அறிந்தால் மீண்டும் அவரைச் சந்திக்க விடமாட்டார்கள் என்ற பயமும் அவர்களை மிகவும் விரக்தியடையச் செய்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் காதலனுடன் ஓடிய மாணவிகள் பலர் வாழ்க்கையை இழந்துள்ளனர். இதில் ஏராளமானோர் மீண்டும் தங்களுடைய பெற்றோரை நாடி வருகிறார்கள்.

இளமைப் பருவத்தில் குழந்தைகளின் மனதின் ஆழத்தை நாம் தொடர்ந்து ஆராய வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகள் எல்லா விஷயங்களையும் பற்றி தங்களிடம் வெளிப்படையாகப் பேச ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோரின் ஆதரவு இல்லாதபோதுதான் குழந்தைகள் அந்நியர்களுடன் நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

படிப்பில் கவனம் செலுத்தி தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு நல்ல வருமானம் மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்வதன் மூலம் அவர்கள் கடினமாக உழைத்து சாதிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளலாம். இந்த வகையான சிந்தனையை சிறுமிகளிடம் விதைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

Related Post

ஒரு தக்காளியின் விலை ரூ.17- வைரலான ‘பில்’

Posted by - August 7, 2023 0
இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது. சில இடங்களில் கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை…

இன்று மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் சிறை தண்டனை

Posted by - April 17, 2024 0
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்…

இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்… புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ…

Posted by - January 23, 2025 0
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன. செல்போன்…

14 மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 2 வாரங்களில் மூன்றரை மடங்கு உயர்வு

Posted by - March 28, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதி வரை தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் இருந்த நிலையில்…

குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு..

Posted by - January 10, 2026 0
குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *