14 மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 2 வாரங்களில் மூன்றரை மடங்கு உயர்வு

207 0

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதி வரை தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.அலர்ட்டுக்கு நடுவே.. இந்தியாவில் மெல்ல உயரும் கொரோனா.. கர்நாடகா,  தமிழகத்தையும் விடலையே.. ‛டேட்டா' | Amid of warning message india covid 19  cases slightly rises on 2nd week ...

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பரிசோதனையை அதிகரிக்க அனைத்து மாநிலங்களையும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் தடம் அறிதல், பொதுமக்களை முகக்கவசம் அணிய செய்தல் உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை பின்பற்றுதல் என 5 அம்ச வழிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 32 மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்தை தாண்டியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த 32 மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு விகிதம் கடந்த 2 வாரங்களில் மட்டும் மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் என்பது அன்றையதினம் செய்யப்பட்ட மொத்த மாதிரிகளில் பரிசோதனையில் தொற்று எத்தனை பேருக்கு உறுதியாகிறது என்பதை குறிப்பிடும். அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 5 மாநிலங்களில் உள்ள 9 மாவட்டங்களில் மட்டும் தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.

ஆனால் தற்போது 14 மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரள மாநிலம் வயநாட்டில் 14.8 சதவீதம் ஆகவும், கோட்டயத்தில் 10.5 சதவீதமாகவும் உள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் 14.6 சதவீதமாகவும், புனேயில் 11.1 சதவீதமாகவும், குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் 10.7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. தெற்கு டெல்லியில் 13.8 சதவீதமாகவும், கிழக்கு டெல்லியில் 13.1 சதவீதம், வடகிழக்கு டெல்லியில் 12.3 சதவீதமாகவும், மத்திய டெல்லியில் 10.4 சதவீதமாகவும் உயர்ந்திருப்பது தினசரி பாதிப்பு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3-ம் அலையின் போது ஏற்பட்ட தொற்று அறிகுறிகளே தற்போது தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலனோருக்கு ஏற்படுவது தெரியவந்துள்ளது. அதே நேரம் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை.

இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்து வந்தாலும் கூட அவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் அதிகமாக இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய கொரோனா தடுப்பு பிரிவு நிர்வாகி டாக்டர் ராஜூஜெயதேவன் கூறுகையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இல்லை. அதே நேரம் பாதிப்பை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.

Related Post

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!

Posted by - March 26, 2025 0
டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு, அதிமுக- பாஜக கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர். இபிஎஸ் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு பிறகே அதிமுக பாஜக கூட்டணி மீண்டும்…

சனிக்கிழமைகளில் இந்த 5 விஷயங்களை தவறி கூட செய்யாதீங்க… இல்லன சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்!

Posted by - November 30, 2024 0
சனிபகவானின் கோபத்தை தூண்டும் செயல்களை செய்யாமல் அவரை சாந்தப்படுத்த நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சனிக்கிழமையன்று செய்யக்கூடாத 5 விஷயங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். சனி…

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

Posted by - November 26, 2022 0
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள்…

ஜி20 மாநாடு எதிரொலி – பாதுகாப்பு பணியில் 1.30 லட்சம் போலீசார்

Posted by - September 8, 2023 0
புதுடெல்லி: ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *