சோனமுத்தா போச்சா.?!! முக்குலத்தோருடன் மோதல்.. வாக்கு வங்கியை இழக்கும் இபிஎஸ்.?

147 0

எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால், சட்டமன்ற தேர்தலின்போது, தென் மாவட்டங்களில் முக்கியமாக கருதப்படும் முக்குலத்தோர் வாக்குளை அதிமுக இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து திமுகவும் பாஜகவும் காய்நகர்த்தி வரும் நிலையில், அதிமுக மட்டும் இந்த ரேஸில் பின் தங்கியிருப்பதாகவும், எடப்பாடியின் இந்த சொதப்பல் நடவடிக்கை தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை கடுமையாக பாதிக்கும் எனவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கச்சிதமாக காய்களை நகர்த்திய திமுக, பாஜக

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிரடி காட்டியுள்ளது. மேலும் நாதக, தவெக தனித்து போட்டி என அறிவித்துள்ளது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு கேம் சேஞ்சராக மாறவும் வாய்ப்புள்ளது.

எனினும் திமுக அதிமுக ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் மாவட்ட வாக்கு வங்கியை குறிவைத்துள்ளது திமுக. தென் மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் முக்குலத்தோர் சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்தே சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது திமுக. காரணம் அந்த சமூகத்தினரின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ளினால் வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏற்படும் என கருதுகின்றனர். இந்நிலையில் தான், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை திருச்சி சிவாவுக்கு வழங்கியுள்ளார் ஸ்டாலின். திருச்சி சிவா இந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் பாஜகவும் முக்குலத்தோரின் வாக்குகளை மனதில் வைத்தே நயினார் நாகேந்திரனை தலைவராக நியமித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்குளத்தோர் வாக்குகளை கோட்டை விடும் இபிஎஸ்

இப்படி நேரம் பார்த்து பிற கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில், ஈபிஎஸ் மட்டும் கோட்டை விட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள். காரனம் ஆரம்பத்தில் இருந்தே ஈபிஎஸ் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஓபிஎஸ் சசிகலா தினகரன் ஆகியோரை ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் அச்சமூகத்தினருக்கு ஈபிஎஸ் மீது ஒருவித எதிர்ப்பலை உருவாகியுள்ளது. மேலும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த தனது சமூகத்தினரையே முன்னிலைப்படுத்த ஈபிஎஸ் விரும்புவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.

இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்பின் போதும் மேடையேறிய ஆர்.பி. உதயகுமாரை இருக்கை இல்லை எனக்கூறி கீழே இறங்க சொல்லியிருக்கிறார் ஈபிஎஸ். உதயகுமாரும் முக்குளத்தோர் சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும் ஈபிஎஸ் உடன் மேடையில் அமர்ந்திருந்த கேபி முனுசாமி மற்று எஸ்பி வேலுமணி இருவருமே கொங்கு மண்ணின் மைந்தர்கள் என்பதாலும், ஈபிஎஸ் மீதான அதிருப்தி அச்சமூகத்தினரிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்படியான நிலையில், திமுக, பாஜக ஆகிய இருகட்சிகளும் கச்சிதமாக வாக்கு வங்கியை நோக்கி காய்களை நர்த்தியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சுயநலத்தினால், அதிமுக பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக குமுறுகின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள்.

தற்போதுதான் பாஜக உடன் கூட்டணி வைத்துவிட்டோமே என்று நினைத்துவிடாமல், இனியாவது சுதாரித்துக்கொண்டு, அச்சமூகத்தினரிடம் நற்பெயரை எடுக்கும் செயலில் இபிஎஸ் இறங்குவாரா என்பதே அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தகவல் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு எட்டுமா.?

 

Related Post

அண்ணாமலைக்கு அடித்த ஜாக்பாட்.. திறமையை பாராட்டிய தலைமை.. தேசிய அளவில் பொறுப்பு…

Posted by - April 11, 2025 0
பாஜக தமிழ்நாடு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு கிடைக்க உள்ளது. அவரது திறமையை பாராட்டியுள்ள தலைமை, இந்த தகவலை தெரிவித்துள்ளது. பாஜக தமிழ்நாடு…

பிரபல அரசியல் கட்சி நிர்வாகிகள், YouTuber-களின் அதிர்ச்சி வீடியோக்களை அடுத்தடுத்து லீக் செய்த மதன் ரவிச்சந்திரன்.. தமிழகமே பரபரப்பு..!

Posted by - March 16, 2023 0
பொறுப்புத்துறப்பு: இந்த செய்தி Mars Tamilnadu Youtube பக்கத்தில் வெளியான முதல் 4 விடியோக்களில் கூறியதை சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.   எங்கும் அரசியல், எதிலும் அரசியல்…

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை… ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்!

Posted by - February 20, 2024 0
கட்சியின் தொண்டர்கள் அழைத்தார்கள் அதனால் தேசிய செயற்குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்தேன் – அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள…

“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

Posted by - April 10, 2024 0
ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ்…

இன்று 11 மாவட்டங்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Posted by - December 11, 2022 0
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *