“தாய் மற்றும் மகள்களை ஆபாச வீடியோ எடுத்த கொத்தனார்” – தொடர்ந்து பாலியல் சைகை காட்டி டார்ச்சர்.. கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்!

163 0

கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் பன்னீர் செல்வம் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். எனவே கீதா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

கீதா வீட்டில் படுக்கை அறையில் உள்ள ஜன்னலில் கதவுகள் பொறுத்தப்படாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த 50-வயதான கொத்தனார் வேலை பார்க்கும் தர்மலிங்கம் ஜன்னல் வழியாக கீதா மற்றும் அவரது மகள்கள் உறங்கும் போது அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் இளம் பெண் வெளியே செல்லும் போது ஆபாச செய்கைகளை காட்டி தொடர் தொல்லை அளித்து வந்துள்ளார்.

இதனால் கதவில்லாத ஜன்னலை இரும்பு ஷீட் வைத்து மறைத்த இளம்பெண் தர்மலிங்கம் செய்யும் அநாகரிக செயல் குறித்து ஊராரிடம் தகவல் தெரிவித்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று இளம்பெண் வீட்டின் ஜன்னலில் பொருத்தப்பட்ட இரும்பு ஷீட்டுகளை சுத்தியலால் நெம்பி துளையிட்ட தர்மலிங்கம் மீண்டும் செல்போனில் படுக்கையறை காட்சிகளை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த இளம்பெண் சத்தம் போடவே தர்மலிங்கம் தப்பியோடியுள்ளார்

இதையடுத்து இளம்பெண் தர்மலிங்கம் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் தர்மலிங்கம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் தனிப்படை அமைத்து அவரை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் மேலும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்து அதிலிருந்த வீடியோக்களை அழித்து வேறு யாருக்காவது இந்த வீடியோக்களை அனுப்பியுள்ளாரா? என விசாரித்து வருகின்றனர். தனியாக இருந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கொத்தனார் பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…

பருவமழை தீவிரம்… மழை நிலவரங்களை கண்காணித்து வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம்

Posted by - November 30, 2023 0
சென்னை: இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி

Posted by - December 24, 2022 0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *