மிரளப் போகும் கோவை! களத்தில் இறங்கும் விஜய்! என்ன ப்ளான்? சம்பவம் லோடிங்!

236 0

கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது.

கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் இந்த கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார்.

இதற்காக விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை செல்கிறார். இன்று மாலை 3 மணிக்கு குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு தொடங்க உள்ளது.

12 ஆண்டுகளுக்கு பிறகு கோவை செல்லும் விஜய்க்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தவெக தொண்டர்கள் விமான நிலையத்தில் காத்துக்கிடக்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் த.வெ.க தலைவர் விஜய், இன்று கோவையில் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

விமான நிலையம் முதல் விஜய் தங்க உள்ள ஹோட்டல் வரைக்கும் வரவேற்பு அளிக்க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். தனி விமானம் மூலம் கோவைக்கு காலை 11.10 மணிக்கு செல்லும் விஜய், அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார். சென்னையில் இருந்து விஜய் 10 மணிக்கு புறப்படுவார் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் விஜய் கோவையில் ரோடு ஷோ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து அவர் தங்க இருக்கும் ஹோட்டல் வரை ரோடு ஷோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கருத்தரங்கு மாலை 3 மணிமுதல் 7 மணிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி நடக்கும் இடம் கல்லூரி வளாகம் என்பதால் விஜய் பேசுவதை மட்டும் நேரலையில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களாக தொகுதி வாரியாக பிரித்து வைத்துள்ளனர். அதன்படி இன்று 9 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மீதமுள்ள 9 மாவட்ட நிர்வாகிகள் நாளை பங்கு பெறுகின்றனர். இன்று மட்டும் 700 பூத் கமிட்டி உறுப்பினர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.

விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக அவரின் பாதுகாப்புக்காக வரும் துபாய் பவுன்சர்களும் இன்று அவருடன் வர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி

Posted by - December 24, 2022 0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…

இதை கூறி தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம்.. இது எங்களின் சவாலாகும்

Posted by - January 31, 2025 0
கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி…

மெட்ராஸ் ஐ: அறிகுறியும்.. தற்காப்பு முறைகளும்.. Madras eye

Posted by - December 2, 2022 0
சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, ‘மெட்ராஸ் ஐ’. கண் வெண்படல அழற்சி…

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

Posted by - November 13, 2025 0
ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப் படியை உயர்த்தி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *