6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு.
அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு கடந்த 15ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன்பின் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அரையாண்டு விடுமுறை நேற்றுடன் முடிவடந்த நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று மீண்டும் பள்ளிக்கூடம் தொடங்குகிறது.
அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் எனவும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.