தமிழ்நாடு ஆளுநர், இலச்சினை.. திருவள்ளுவர் ஆண்டு.. ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்

409 0

வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ் பேசுபொருளாகியுள்ளது.

சென்னையில் ஜனவரி 4ஆம் தேதி நடந்த நிகழ்வு ஒன்றில், “ தமிழ்நாடு என கூறுவதை விட தமிழகம் என சொல்வதே பொருத்தமாக இருக்கும்” என ஆளுநர் பேசியது சர்ச்சையானது. அதற்கு பிறகு ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவுக்காக அனுப்பிய அழைப்பிதழ் மீண்டும் சர்ச்சையானது.

ஆளுநர் மாளிகையின் அந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது. ஆளுநர் மாளிகையின் அந்த அழைப்பிதழுக்கு பல்வேறு கட்சிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்தன.

இந்த தமிழ்நாடு சர்ச்சை குறித்து  டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி அடங்கிய குழுவினர் குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநரின் போக்கை எதிர்த்து மனுவை வழங்கினர். இதற்கு பிறகு டெல்லி சென்றார் ஆளுநர். ஆளுநர் தரப்பிலிருந்து தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து விளக்க கடிதமும் வந்தது. அதில் தான் தமிழகம் என குறிப்பிடலாம் என சொன்னதை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என விளக்கமளித்தார் ஆளுநர்.

ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்

ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்

You May Like

Related Post

சூப்பர்ஸ்டார்-னா ஒருத்தர் தான், தல-ன்னா.. லியோ மேடையில் விஜய் அதிரடி பேச்சு

Posted by - November 2, 2023 0
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என தொடர்ந்து சர்ச்சை வரும் நிலையில் அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். சூப்பர்ஸ்டார் ஒருத்தர் தான்.. “புரட்சி தலைவர்-னா ஒருத்தர்…

ஷர்மிளா இனி காருக்கு ஓனர்.. கோவை பெண் ஓட்டுநரை நேரில் சந்தித்த கமல்ஹாசன்.. இன்ப அதிர்ச்சியாக கார் கிஃப்ட்!

Posted by - June 26, 2023 0
கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக அறியப்படும் ஷர்மிளாவிற்கு நடிகர் கமல்ஹாசன் கார் பரிசளித்துள்ளார். கோயம்புத்தூரின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என பிரபலமானவர் ஷர்மிளா. தனியார்…

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ மீது வழக்கு பதிவு

Posted by - April 13, 2024 0
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட…

“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படுவது மன்னிப்பே அல்ல” – கவுரி கிஷன்

Posted by - November 11, 2025 0
பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது” என்று…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

Posted by - May 4, 2023 0
காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்காக முன்வைக்கப்படும் அரசியல் முழக்கமே திராவிட மாடல் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் என விளக்கமளித்து ஆங்கில நாளிதலுக்கு தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *