‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 18-வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேர் கைது

54 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி சென்​னை​யில் நேற்று 18-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தமிழகத்​தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணி​யில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதன் பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை ஊதி​யத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு உள்​ளது. இதனால் பாதிக்​கப்​பட்​டுள்ள 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்​பாட்டை சரிசெய்​யக் கோரி நீண்ட கால​மாக போராடி வரு​கின்​றனர்.

வெவ்​வேறு இடங்​களில்… இந்த நிலை​யில், சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கம் சார்​பில் சென்​னை​யில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி கால​வரையற்ற போராட்​டம் தொடங்​கப்​பட்​டது.

கல்​வித் துறை தலைமை அலு​வல​கம் அமைந்​துள்ள நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகம், எழும்​பூரில் உள்ள மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி அலு​வல​கம், சேப்​பாக்​கம் எழில​கம், கடற்​கரை சாலை​யில் உள்ள மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் என வெவ்​வேறு இடங்​களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

17-வது நாளான நேற்று முன்​தினம் (ஞா​யிறு) மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​து, மாலை​யில் விடு​வித்​தனர். இந்​நிலை​யில் 18-வது நாளான நேற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் பேரணி​யாக சென்று போராட்​டம் நடத்​தினர்.

‘சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும், திமுக அரசே! தேர்​தல் வாக்​குறு​தியை நிறை வேற்​று, ஊதிய உயர்வு கேட்​க​வில்​லை, உரிய ஊதி​யம்​தான் கேட்​கிறோம்’ என்று அவர்​கள் கோஷம் எழுப்​பினர். போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அனை​வரும் மாலை​யில் விடுவிக்​கப்​பட்டனர்​.

Related Post

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை – பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

Posted by - September 20, 2024 0
போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை என பாட்டாளி மக்கள்…

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Posted by - July 24, 2025 0
கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்,…

சென்னையில் 4 லட்சம் பேருக்கு உணவு வினியோகம் தொடருகிறது: மாநகராட்சி ஆணையர் தகவல்

Posted by - December 7, 2023 0
சென்னை: சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *