‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 18-வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேர் கைது

73 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி சென்​னை​யில் நேற்று 18-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தமிழகத்​தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணி​யில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதன் பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை ஊதி​யத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு உள்​ளது. இதனால் பாதிக்​கப்​பட்​டுள்ள 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்​பாட்டை சரிசெய்​யக் கோரி நீண்ட கால​மாக போராடி வரு​கின்​றனர்.

வெவ்​வேறு இடங்​களில்… இந்த நிலை​யில், சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கம் சார்​பில் சென்​னை​யில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி கால​வரையற்ற போராட்​டம் தொடங்​கப்​பட்​டது.

கல்​வித் துறை தலைமை அலு​வல​கம் அமைந்​துள்ள நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகம், எழும்​பூரில் உள்ள மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி அலு​வல​கம், சேப்​பாக்​கம் எழில​கம், கடற்​கரை சாலை​யில் உள்ள மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் என வெவ்​வேறு இடங்​களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

17-வது நாளான நேற்று முன்​தினம் (ஞா​யிறு) மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​து, மாலை​யில் விடு​வித்​தனர். இந்​நிலை​யில் 18-வது நாளான நேற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் பேரணி​யாக சென்று போராட்​டம் நடத்​தினர்.

‘சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும், திமுக அரசே! தேர்​தல் வாக்​குறு​தியை நிறை வேற்​று, ஊதிய உயர்வு கேட்​க​வில்​லை, உரிய ஊதி​யம்​தான் கேட்​கிறோம்’ என்று அவர்​கள் கோஷம் எழுப்​பினர். போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அனை​வரும் மாலை​யில் விடுவிக்​கப்​பட்டனர்​.

Related Post

“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

Posted by - March 22, 2023 0
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த…

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ கடந்தது

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும்…

”சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்கவேண்டும்..” – தவெக தலைவர் விஜய்

Posted by - January 6, 2025 0
இன்று நடைபெற்ற நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பேசுபொருளான நிலையில், சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என தவெக…

பிரமாண்டமான தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா.. இதன் விலை எத்தனை கோடி தெரியுமா

Posted by - August 23, 2024 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா…

உடம்புல எனர்ஜியே இல்லாம சொங்கி மாதிரி இருக்கீங்களா? அப்ப ‘இந்த’ உணவுகள சாப்பிடவே சாப்பிடாதீங்க!

Posted by - November 2, 2023 0
உங்களை எப்போதும் எனர்ஜியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். ஆனால், உங்கள் எனர்ஜி லெவல் எப்போதும் குறைவாக இருக்கிறதா? ஆம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *