அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி

36 0

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 426 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப் பிரிவுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிப்ரவரி 9ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பிப்பது எப்படி? என்ன தகுதி? வயது வரம்பு ஆகியவை குறித்து விரிவாக அறியலாம்.

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கு பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன. மேலும், 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.

1,277 பேர் பணியமர்த்தல்

ஆரம்பத்தில் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் முதற்கட்டமாக 574 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்படவும், பின்னர் 823 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தற்காலிகமாக 1,277 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆக மொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது. இதற்குத் தேர்வர்கள் 09.02.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை, கோவை, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய எட்டு மண்டலங்களில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

எஸ்சி, எஸ்டி – ரூ.100

பிற பிரிவினர் – ரூ.250

வயது வரம்பு

அதிகபட்ச வயது 57

கல்வித் தகுதி

முதுநிலை பட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் 55% பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட பழங்குடியினர் /பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / மாற்றத்திறனாளி பிரிவினர் ஆகியோர் 50% மதிப்பெண் பெற்றிருத்தல் போதுமானது. உடன், பி.எச்டி அல்லது NET / SLET / SET ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருத்தல் அவசியம்.

கௌரவ விரிவுரையாளர்கள் தங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் கல்வியில் மதிப்பீடு 85 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் 15 மதிப்பெண்கள் ஆகியவற்றில் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் 100-ன் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். அரசின் வழக்கமான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்.

விண்ணப்ப நடைமுறைகள்

விண்ணப்பப் பதிவு செய்தல்

விண்ணப்ப விவரங்களை உள்ளிடுதல்

சான்றிதழ்கள் பதிவேற்றுதல்

புதிய விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல்

https://www.tngasa.org/pdf/TNGAS-GL-Instruction-Tamil.pdf என்ற இணைப்பில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட வாரியான காலி பணியிடங்களின் விவரம் https://www.tngasa.org/pdf/district-wise-GL-New.pdf என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Post

“நயன்தாராவின் அப்பாவாக நடிக்கும் சீமான்! படத்தின் கதை இதுதானா?!”

Posted by - January 4, 2024 0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா…

விடுதலை 2 திரைபார்வை..

Posted by - December 20, 2024 0
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இருக்கும். சமூக அக்கறை மற்றும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை அழுத்தமாக பேசி வருகிறார்…

அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரிப்போம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Posted by - June 25, 2024 0
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975ஆம் ஆண்டு இதே நாளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்தாக கூறியுள்ளார். அரசியலமைப்பை தூக்கியெறிந்து, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கிய…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் – இப்படியா பண்றது?

Posted by - May 13, 2025 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இரு தலைவர்களுக்கிடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. ஸ்டாலின், இபிஎஸ்-ன் பதிவுகள் என்ன.? பார்க்கலாம்……

நிம்மதியே இல்ல… ‘அடுத்தவர்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’… ஜி.பி.முத்து வீடியோ வைரல்

Posted by - December 14, 2023 0
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார். நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *