கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க

371 0

சென்னை:

கீரைகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை என்றாலும், கர்ப்பிணிகள் கீரைகள் சாப்பிடலாமா? என்ன வகையான கீரைகளை சாப்பிட வேண்டும் தெரியுமா?

பப்பாளி, அன்னாசி பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கர்ப்பம் கலைந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கை உள்ளது.. இந்த பழங்களால் உடல் சூடு அதிகரிக்குமே தவிர, கர்ப்பம் கலையும் என்பதற்கான எந்தவிதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லையாம்.. எனவே, அளவாக பப்பாளி, அன்னாசிப் பழங்களை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத  கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க | Do you know Amazing Uses of Curry Leaves and  What are the ...

பொதுவாகவே கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. இதுபோன்ற நேரங்களில் கோதுமை மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து மிகுந்த முருங்கைக்கீரை, முள்ளங்கியை தவறாமல் எடுத்து கொள்ளலாம்.. அதனால்தான், முருங்கைக் கீரையும், பாசிப் பருப்பு கலந்த பொரியலும் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு தருவார்கள்..

கர்ப்பிணிகள்:

அதேபோல, கர்ப்பிணிகள் தினமும் உணவில் கீரையை கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும்.. காரணம், கீரைகளில் வைட்டமின்கள், தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.. அந்தவகையில், பொன்னாங்கண்ணி, புள்ளிச்சரை கீரை, மணத்தக்காளி கீரை போன்றவற்றில் இரும்பு சத்துக்கள் உள்னன.. அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்றவை தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும். பசலிக்கரை, ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியவை.. கொத்தமல்லியும், தூதுவளையும், சுவாசம் மற்றும் சளி பிரச்சனைகளை சரி செய்யவும் உதவக்கூடியவை.
முளைக்கீரை:
இதைத்தவிர, பசலிக்கீரை, முளைக்கீரை போன்றவை சிறுநீர்பாதை பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும்.. வல்லாரை கீரை சிறந்த நினைவாற்றலை தரக்கூடியவை.. புதினா கீரைகள், கர்ப்ப நேரத்தில் ஏற்படக்கூடிய மயக்கத்தையும் தடுத்து நிறுத்தக்கூடியவை. அந்தவகையில், எந்த கீரைகளையுமே தவிர்க்கக்கூடாது. இதில், முக்கியமானது கறிவேப்பிலை.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்..
கறிவேப்பிலை:
இந்த கறிவேப்பிலை இலையை, நிழலில் உலரவைத்து, அரைத்து பொடியாக்கி, அதனுடன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும்.. தினமும், சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து ஒருவேளையாவது பிசைந்து சாப்பிட்டால், அவ்வளவும் பலன்தரும். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை வேறு இல்லை..

Related Post

டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது…

Posted by - March 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தும் நிலையில், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

மின் கட்டணம் குறைய போகுது.. வீட்டுக்கே கணக்கெடுக்க வரும் அதிகாரிகள்.. சந்தோஷமான செய்தி

Posted by - November 9, 2023 0
சென்னை: அடுக்குமாடி பொது சேவை மின் கட்டணத்தை குறைப்பு விவகாரத்தில் வீட்டுக்கே வந்து அதிகாரிகள் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். எந்த வீடுகள் எல்லாம் பத்து வீடுகள்…

நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

Posted by - December 14, 2023 0
சென்னை: பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா? மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய…

விஜய்-சங்கீதா விவாகரத்து!

Posted by - February 27, 2026 0
நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு! “விஜய் நடிகையுடன் திருமணம் தாண்டிய உறவில் விஜய் இருந்ததாக, அவரது மனைவி சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *