சீமான் பேச்சு அநாகரீகமானது அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் – கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

236 0

KS Alagiri Press Meet | தமிழர்களின் பெருமையை குறைக்கும் வகையில் சீமான் நடந்துகொள்ளக் கூடாது என சீமானுக்கு அழகிரி அறிவுரை

காவல்துறை பாதுகாப்புடன் இருந்துகொண்டு பிற மாநில மக்களுக்கு எதிராக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவாரூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண வெற்றி விழா மற்றும் அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு பரப்புரை இயக்க துவக்க விழா நடைபெற்றது. புதிய ரயில் நிலையம் தொடங்கி, பனகல் சாலை வழியாக நடைபெற்ற பேரணியில், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், மேளதாளங்கள் முழங்க கே.எஸ்.அழகிரிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற, காவிரி டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ஈரோட்டில் காங்கிரஸின் வெற்றி எழுதப்பட்டு விட்டதாகக் கூறினார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வடமாநிலத் தொழிலாளர்கள்தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதற்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, வட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்வதால் தான் திருப்பூரில் நூல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்று தெரிவித்தார். வட இந்தியர்கள் இல்லையென்றால் திருப்பூரில் தொழிற்சாலைகள் இயங்காது என்றும், அவர்களை தாக்கினால் வடமாநிலங்களில் பணியாற்றும் தமிழர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்தார்.

அருந்ததியர் சமூக மக்கள் தெலுங்கு பேசுவதால் அவர்களை வந்தேறிகள் என்று சீமான் பேசுவதாகவும், பெரியார், வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் அவர் இவ்வாறு விமர்சிப்பதாகவும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.அரசியல் ஆதாயத்துக்காக இப்படி செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, தமிழர்களின் பெருமையை குறைக்கும் வகையில் சீமான் நடந்துகொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Post

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

Posted by - December 26, 2024 0
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ். தமிழ்நாட்டின் பெருமைமிகு…

கும்பகோணம் சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?

Posted by - October 8, 2025 0
சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?  சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பரவும் புதிய வகை கொரோனா ஜே.என்.1.. பரபரக்கும் ஆய்வுகள்!

Posted by - December 28, 2023 0
சென்னை: தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஜே.என். 1…

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - November 21, 2023 0
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை…

உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி – ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”

Posted by - May 26, 2025 0
டெல்லிக்கு போனதாக புலம்பியது போதும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கதறுவதை தமிழ்நாடே ரசிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *