அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

172 0

சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த கீரையில் 63 வகையான சத்துக்கள் இருக்கின்றன. இதில் 8.4 சதவீதம் புரதச் சத்து, 1.4 சதவீதம் கொழுப்புச் சத்து, 3.1 சதவீதம் தாது உப்புகள் உள்ளிட்டவை உள்ளன.

அகத்தி கீரை இரு வகைப்படும். ஒன்று வெள்ளை நிற அகத்தி கீரை. இது வெள்ளை பூக்களை கொண்டது. அது போல் சிகப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி கீரை. இவை இரண்டுமே மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன்  மட்டும் சாப்பிடாதீர்கள்! | Do you know the benefits of Agathi Keerai? -  Tamil Oneindia

அகத்தி கீரை உணவை எளிதில் ஜீரணமாக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கிவிடும். உடலின் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சியாகும். அல்சர் உள்ளிட்ட வயிற்றுப்புண் குணமாகும். இந்த அகத்திக் கீரையை சேற்றுப்புண்களில் தடவினால் அது விரைவில் குணமாகும். தேமல் வந்த இடத்தில் கீரையை தடவினாலும் குணமாகும். இந்த கீரையின் சாற்றுடன் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது பூசினால் அவை பூப்போல் உதிர்ந்துவிடும். தலைச்சுற்றல், கண் எரிச்சல், போன்ற பிரச்சினைகள் குணமாகும். பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்த அகத்திக் கீரை பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள விஷம் வெளியேறும்.

இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை கட்டுக்குள் வரும். விஷம் குடித்தவர்கள் அகத்திப்பட்டை கசாயத்தை 50 கிராம் எடுத்துக் கொண்டு 8 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால் அந்த விஷமே முறிந்துவிடும். உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தும். ஆண், பெண் உறுப்புகளில் ஏற்படும் எரிச்சலையும் நீக்கும்.

சித்த மருத்துவம் சாப்பிடுவோர் இந்த கீரையை எடுத்துக் கொள்ளக் கூடாது. ரியாக்ஷன் அதிகமாகி சிரங்கு ஏற்படும். அகத்திக் கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. மது அருந்தியவர்களும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. மது அருந்திவிட்டு இந்த கீரையை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும்.

நுரையீரலை பாதுகாக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், சருமத்திற்கு சிறந்தது, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும், சைனஸை குணப்படுத்தும். ரத்த கொதிப்பு, கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்கும். மலமிலக்கியாக செயல்படுகிறது. வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை அழிக்கிறது. பித்தத்தை சமன் செய்துவிடுகிறது. குடல் புண், தொண்டை வலி, தொண்டை புண்ணை நீக்கும்.

Related Post

”நேர்மையில்லாத ஆளுநர் ரவி” 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல், உச்சநீதிமன்றம் ஆப்பு – மாநில அரசின் வசமாகும் பல்கலை.,

Posted by - April 8, 2025 0
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் அதிகாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.…

தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

Posted by - August 5, 2023 0
சேலம்: சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94…

புதுச்சேரி, தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை, தியாக உணர்வுடன் இஸ்லாமியர்கள்

Posted by - June 7, 2025 0
பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு…

“அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா”- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!

Posted by - May 28, 2023 0
25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *