கும்பகோணம் மகாமகம் குளத்தின் சிறப்பு, மாசி மகத்தன்று இங்கு நீராடினால் பாவங்கள் தீரும் என சொல்கிறார்களே அது ஏன் என்பதை இங்கு காணலாம்.
புராணங்களில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் நீராடி செல்ல தேவாதி தேவர்களும் பூலோகம் வருவதாக கூறுவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் விழா கொண்டாடப்படும். அப்போது லட்சக்கணக்கானோர் கும்பகோணத்தின் நடுவே இருக்கும் பகுதியான மகா மகம் குளத்தில் புனித நீராட செல்வார்கள்.

